டாக்டர் ஆதாம் : 3-வது அலைத் திரளைகளில் 527 பணியிடம் சார்ந்தது

கடந்த செப்டம்பர் 20 முதல் நேற்று வரையில், நாட்டில் கோவிட் -19 தொற்றுநோயின் மூன்றாவது அலைகளில் பதிவான மொத்தம் 852 திரளைகளில், 527 திரளைகள் பணியிடங்கள் சார்ந்த திரளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

திரையிடப்பட்ட பணிக்குழுக்களில், மொத்தம் 315,100 பேரில் கோவிட் -19 தொற்றுக்கு  78,906 பேர் சாதகமான முடிவுகள் கொண்டுள்ளது கண்டறியப்பட்டதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

“பணியிட நேர்மறையான பாதிப்புகளில், மொத்தம் 58,318 பேர் மலேசியர் அல்லாதவர்கள், 20,588 பேர் மலேசியர்கள்,” என்று அவர் ஜொகூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உற்பத்தி பிரிவில் ஆக அதிகத் திரளைகள் (194) பதிவாகியுள்ளன; அதனைத் தொடர்ந்து, சேவைத் துறைகளில் (175), கட்டுமானத் துறையில் (97), பொது நிர்வாகம் (39), விவசாயம் (14), சுரங்கம் / குவாரி தொழிற்துறையில் (8) எனப் பதிவுகள் உள்ளன.

  • பெர்னாமா