வேலையின்மை பிரச்சினை : ‘நிலைமை நிலையானதாக இருக்கும்’ என்ற எதிர்பார்ப்பை அமைச்சர் தெளிவுபடுத்த வலியுறுத்து

இந்த ஆண்டு நடுப்பகுதியில் வேலையின்மை விகிதம் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் திணைக்களத்தின் அமைச்சர் (பொருளாதார விவகாரங்கள்) முஸ்தபா முகமது கூறியதை, ஈப்போ பாரத் எம்.பி. எம்.குலசேகரன் கண்டித்தார், போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் தவறிவிட்டது என்று அவர் கூறினார்.

மலேசியாவின் அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) 56 விழுக்காடு சரிந்து 3.4 பில்லியன் அமெரிக்க டாலராக (RM14 பில்லியன்) உயர்ந்துள்ளது என்பதை முன்னிலைப்படுத்திய முன்னாள் மனிதவள அமைச்சர், அன்னிய நேரடி முதலீட்டில் இந்தச் சரிவை நிவர்த்தி செய்வதற்கு உறுதியான திட்டம் இல்லாமல் புதிய வேலைகள் உருவாக்கப்பட மாட்டாது என்று கூறினார்.

இந்த ஆண்டு நடுப்பகுதியில் நிலைமை மேம்படும் என்று நம்புவதாக முஸ்தபா தனது எதிர்பார்ப்புகளை வெறுமனே வெளிப்படுத்தியது ஆச்சரியமளிப்பதாகவும் குலசேகரன் சொன்னார்.

“ஓர் அமைச்சராக, அந்த அறிக்கை முற்றிலும் பொறுப்பற்றது என்று நான் உணர்கிறேன். நீங்கள் இப்போது எதையாவது செய்யக்கூடிய நிலையில் இருக்கும்போது, ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஊடகங்களுக்குச் சொல்வதில் அர்த்தமில்லை.

“தயவுசெய்து மலேசிய மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுங்கள், ஏனென்றால் அவர்களில் சிலர் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையில் மிகவும் அவநம்பிக்கையான சூழ்நிலையில் உள்ளனர்.

“ஓர் அமைச்சராக, அதிகரித்துவரும் வேலையின்மையைச் சமாளிக்க நீங்கள் ஒரு வழியை வழங்கத் தவறிவிட்டீர்கள், நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள்,” என்று குலசேகரன் கூறினார்.

இந்த ஆண்டு நடுப்பகுதியில் நிலைமை சீராக இருக்கும் என்ற தனது எதிர்பார்ப்பைத் தெளிவுபடுத்த முஸ்தபாவை அவர் கேட்டுக்கொண்டார்.

“தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் தோல்வியுற்றது என்று நான் முடிவு செய்யும் ஒரு அடிப்படையை நான் தருகிறேன்.

“புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, 2021 ஜனவரியில், 15 முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் தொடர்ந்து 0.3 விழுக்காடு புள்ளிகள் அதிகரித்து, 13.5 விழுக்காடாக இருந்தது,” என்று குலசேகரன் கூறினார்.

இதே நிலைமை 15 முதல் 30 வயதுடைய இளைஞர்களின் வேலையின்மை நிலையும், 2020 டிசம்பருடன் ஒப்பிடும்போது 0.5 விழுக்காடு அதிகரித்து 9.2 விழுக்காடாக உள்ளது.

“இன்று வரை இதை நிவர்த்தி செய்வதற்கான உறுதியான திட்டம் எதுவும் இல்லை, எனவே புதிய வேலைகள் எவ்வாறு உருவாக்கப்படும்?

“முஸ்தபா புதிய வேலைகளை உருவாக்க ஒரு சிறந்த கொள்கையை வகுத்திருக்க வேண்டும்.

“அது செயல்படுத்தப்பட்டால் மட்டுமே, மலேசியர்கள் நம்பிக்கையுடன் கவனமாக இருப்பார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.