கோயில் நிலப் பிரச்சனை : ம.இ.கா. தலைவரின் அறிக்கையை இராமசாமி கண்டித்தார்

ம.இ.கா. 74-வது பொது மாநாட்டில் அதன் தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், இந்து கோயில் கட்டுவது தொடர்பாக வெளியிட்ட நினைவூட்டலைப் பினாங்கு துணை முதல்வர் II பி இராமசாமி,  கண்டித்துப் பேசியுள்ளார்.

விக்னேஸ்வரன் தனது கொள்கை உரையில், நில நிலை தகராறு காரணமாக கோயில்கள் இடிக்கப்படும் அபாயத்தைத் தவிர்க்க, அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் புதியக் கோயில்கள் கட்டப்பட வேண்டும் என்றார்.

தளத்தைச் சுற்றியுள்ள பிரச்சினை இந்திய சமூகத்திற்கும்

மலேசியாவில், இந்து கோவில் நிலப் பிரச்சனை, நமக்கும் பிற இனங்களுக்கும் இடையில் பிளவுபடுத்தும் காரணியாக இனியும் தொடரக் கூடாது என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

பின்னர், கோவிலை இடிக்கும் நிலை ஏற்படும்போது, இந்துக்கள்தான், அவர்களின் தெய்வத்தை அவமதிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

அந்த அறிக்கையை இராமசாமி வரவேற்கவில்லை.

“கோயில்கள் இடிக்கப்பட்டு, தங்கள் கடவுள்களுக்கு எதிரான அவமானங்களுக்கு இந்துக்கள் காரணம் என்று கூறும் அறிக்கை மிகவும் பொறுப்பற்றது மற்றும் தேவையற்றது.

இதுபோன்ற அறிக்கைகள் கடந்த சில தசாப்தங்களாக, நாட்டில் இந்து கோவில்கள் இடிக்கப்படுவது தொடர்பான உண்மைகளையும் கேள்விகளையும் பிரதிபலிக்கவில்லை.

“சுருக்கமாக, இந்த அறிக்கை பாதிக்கப்பட்டவரின் மீதுதான் விரலைச் சுட்டிக்காட்டுகிறது, ஆனால் சட்டபூர்வமானது அல்ல என்று கூறி, கோயிலை இடித்த குற்றவாளி மீது அல்ல,” என்று இராமசாமி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் கோயிலைக் கட்டுவதற்கு இந்தியச் சமூகத்திற்கு நிலம் வழங்கப்படுவது போலவும், ஆனால் அதன் கட்டுமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்காததால் அதிகாரிகளால் இடிக்கப்படுவது போலவும் குழப்பமான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

“இது உண்மைகளைத் தவறாக சித்தரிப்பதுடன், இந்த நாட்டில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தளங்களின் கட்டுமானம் இவ்வளவு காலமாகக் கட்டுபடுத்தப்பட்டுள்ள யதார்த்தத்தையும் புறக்கணிக்கிறது.”

கோவில் வளர்ச்சிக்கு நியாயமான நில அணுகல் கிடைத்தால், சட்டவிரோத நிலம் குறித்த கேள்வி எழாது என்றும் அவர் கூறினார்.

எனவே, விக்னேஸ்வரன் தனது கருத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றார் இராமசாமி.

இதற்கிடையில், நேற்று தேசியக் கூட்டணிக்கு ஆதரவளித்ததற்காகவும், எதிர்காலத்தில் அக்கட்சி தொடர்ந்து அத்தகைய ஆதரவை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்ததற்காகவும் ம.இ.கா.வைப் பாராட்டிய பிரதமர் முஹைதீன் யாசினையும் இராமசாமி விமர்சித்தார்.

இந்தியர்களைக் கவனித்துக்கொள்வேன் என்று முஹைதீன் அளித்த வாக்குறுதி அர்த்தமற்ற அறிக்கை என்று இராமசாமி கூறினார்.

முஹைதீனின் அந்தப் பேச்சு, இந்திய சமூகத்திற்குக் கொடுக்கப்பட்ட “தவிடு” மட்டுமே என்று அவர் மேலும் கூறினார்.

“பரஸ்பர செழிப்பு பற்றி பேச முடியும், ஆனால் கடந்த சில தசாப்தங்களாக இந்தியச் சமூகம் பின்தங்கியிருக்கிறது என்பது தெளிவான ஒன்று.

“தேசியக் கூட்டணி நிர்வாகத்தின் கீழ், இந்தியர்கள் தங்கள் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் இழந்துவிட்டனர். மஇகா என்பது கடந்த காலத்தின் ஒரு மரபு, அதன் தலைவர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியர்களை (நிர்வாகத்தில்) நினைவுபடுத்தும் வகையில் ஒரு ‘கண்காட்சி பொருள்’ மட்டுமே,” என்று அவர் மேலும் கூறினார்.