இன்று 1,767 புதிய நேர்வுகள், 12 இறப்புகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 1,767 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சரவாக் 607 நேர்வுகளுடன், அதிக தினசரி பாதிப்புகள் பங்களிப்பாளராக உள்ளது.

நாடு முழுவதும், செயலில் உள்ள புதிய நேர்வுகளின் எண்ணிக்கை இப்போது 16,300 -ஆக உள்ளது.

ஆகிய நான்கு வழக்குகளும், வழக்குகளும், தெரெங்கானுவில் ஒரு வழக்குகளும் சம்பந்தப்பட்ட 12 பிற்பகல் மரணங்கள்.

இதற்கிடையில், 12 இறப்புகள் இன்று புகாரளிக்கப்பட்டுள்ளன. சபா மற்றும் சரவாக்கில் தலா 4, சிலாங்கூரில் 3, திரெங்கானுவில் 1 என பிற்பகல் வரை பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆக, நாட்டில் இதுவரை இத்தொற்றுக்கு 1,345 நோயாளிகள் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே, இன்று 1,290 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 82 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் (607), சிலாங்கூர் (483), கோலாலம்பூர் (133), சபா (117), கிளாந்தான் (103), பினாங்கு (92), ஜொகூர் (74), கெடா (39), பேராக் (36), நெகிரி செம்பிலான் (29), மலாக்கா (17), பஹாங் (14), திரெங்கானு (13), புத்ராஜெயா (7), லாபுவான் (3).

இன்று 9 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் நான்கு பணியிடத் திரளைகள், மூன்று சமூகத் திரளைகளையும் உள்ளடக்கியது.