மருத்துவ கஞ்சா பயன்படுத்துபவர்களை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற சட்டங்களை மாற்றுங்கள்

தூக்குமேடையில் இருந்து பயனர்களை காப்பாற்ற மருத்துவ கஞ்சாவை உடனடியாக குற்றமற்றதாக்க வேண்டும் என்று பி.கே.ஆரின் கெபுன் புங்கா(Kebun Bunga) சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் ஓங்(Jason Ong) கூறினார்.

பாராளுமன்ற மருத்துவ கஞ்சா குழுவிற்கும், பிரதம மந்திரிக்கும் இடையிலான சாதகமான கலந்துரையாடல்களுக்கு பதிலளித்த அவர், சுகாதார காரணங்களுக்காக கஞ்சாவைப் பயன்படுத்துபவர்கள் இப்போது மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் ஓங்

எனவே, மருத்துவ கஞ்சா பயன்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை பொருந்தாது என்பதை உறுதிசெய்யவும், மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை குற்றமற்றவையாக மாற்றவும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 (DDA) க்கு அவசர திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

மருந்துச்சீட்டு உள்ளவர்களுக்கு கஞ்சா விற்க மருந்தகங்களுக்கு உரிமம் வழங்கப்படுவதால் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

DDA இன் கீழ், குறைந்தது 200 கிராம் கஞ்சாவை வைத்திருக்கும் நபர்கள் போதைப்பொருளைக் கடத்துவதாகக் கருதப்பட்டு மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்.

போதைப்பொருள் முதலாளிகள்  எப்பொழுதும் அதிகாரிகளிடமிருந்து தப்புகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, மேலும் பொருத்தமற்றவர்கள் தான் மரண தண்டணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்று பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

சாத்தியமான பணப்பயிர்

மருத்துவ கஞ்சாவின் பயன்பாட்டை இயல்பாக்குவது என்பது சமூகம் முழுவதும் கஞ்சா பயன்படுத்துபவர்களாக இருக்கும் என்று அர்த்தமல்ல.

“கஞ்சா மற்றும் கெத்தும் நன்மைகள் எதிர்மறையான அம்சங்களை விட அதிகமாக இருப்பதால், இது நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும் அடுத்த பயிராக இருக்கலாம்” என்று அவர் கூறினார்.

மருத்துவ கஞ்சா சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில், அமிருதீன் @ நடராஜன் அப்துல்லா, 63, 77.84 கிலோ கஞ்சாவை விநியோகித்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ராணுவ வீரர், தனது புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க கஞ்சாவைப் பயன்படுத்தி பிடிபட்டார்.

ஏப்ரல் 12 அன்று, சணல், மருத்துவ கஞ்சா மற்றும் கேத்தும் தொழில் ஆகியவற்றை மையமாகக் கொண்ட விவாதத்திற்கு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் சாதகமாக பதிலளித்ததாக இருதரப்பு மருத்துவ கஞ்சா குழு கூறியது.

மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவைப் பயன்படுத்தும் குடிமக்கள் மீது வழக்குத் தொடர்வது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

“தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரதமர் சாதகமாக பதிலளித்தார் , மேலும் இது அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்படும்” என்று குழு கூறியது.

இந்த குழுவில் சையத் சாடிக் சையத் அப்துல் ரஹ்மான் (Muda-Muar), அசாலினா ஓத்மான் சைட் (BN-Pengerang), காலித் அப்த் சமத் (Pakatan Harapan-Shah Alam), டாக்டர் சேவியர் (Independent-Kuala Langat), இக்னேஷியஸ் டேரல் லீகிங் (Warisan-Penampang), கெல்வின் யி (Harapan-Bandar Kuching) மற்றும் டாக்டர் அஸ்மான் இஸ்மாயில் (Harapan-Kuala Kedah) ஆகியோர் உள்ளனர்.

குழுவின் அறிக்கைப்படி, மருத்துவ கஞ்சா தொழில் ஆண்டுக்கு RM60 பில்லியனை ஈட்டுகிறது மற்றும் அண்டை நாடான தாய்லாந்து உட்பட 40 க்கும் மேற்பட்ட நாடுகள் அதன் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கியுள்ளன.