முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மோசமாகிறது

ஹரிராயா கொண்டாடுவதற்காக மக்கள் கிராமத்திற்குத் திரும்புவதால் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளுக்கான நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதைக் காட்டியது.

வடக்கில், புக்கிட் தம்புன் முதல் ஜாவி வரையிலான 8.1 கிலோமீட்டர் நீளத்தில் நெரிசல் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் தெற்கே செல்லும் போக்குவரத்தும் பெடாஸ் லிங்கியில்(Pedas Linggi) இருந்து சிம்பாங் அம்பாட்(Simpang Ampat) வரை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

துடா(Duta)-உலு(Ulu) கிலாங் நெடுஞ்சாலையில் (DUKE), கிரீன்வுட்(Greenwood) மற்றும் கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலைக்கு செல்லும் செந்துல் பசார்க்குப்(Sentul Pasar) பிறகு போக்குவரத்து அதிகமாக இருந்தது; அத்துடன் மத்திய ரிங் ரோடு 2ல் (MRR2) கோம்பாக் டோல் பிளாசா மற்றும் கெண்திங் செம்பாவுக்குச்(Genting Sempah) செல்கிறது; மற்றும் புக்கிட் டிங்கி(Bukit Tinggi) முதல் லென்டாங்(Lentang) வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சமீபத்திய போக்குவரத்துத் தகவல்கள் கட்டணமில்லா ப்ளஸ்லைன் 1800-88-0000 மற்றும் http://www.twitter.com/plustrafik உள்ள ட்விட்டர் அல்லது மலேசிய நெடுஞ்சாலை ஆணைய  1800-887752 அல்லது http://www.twitter.com/LLMinfotrafik உள்ள ட்விட்டர் மூலமாகவும் போக்குவரத்துத் தகவலைப் பெறலாம்