MB: முன்மொழியப்பட்ட செரி இஸ்கந்தர் விமான நிலைய இடம் விலை போனது

செரி இஸ்கந்தரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட நிலம் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தானதால் பேராக் அரசாங்கத்தால் நிலத்தை தக்கவைக்க முடியவில்லை.

நில உரிமையாளரான பேராக் மாநில வளர்ச்சிக் கழகம் (PKNP) தனியார் நிறுவனத்திற்கு சட்டப்பூர்வமாக விற்பனை செய்ததால், மாநில அரசால் நிலத்தைப் பற்றி எதுவும் செய்ய முடியவில்லை என்று மந்திரி பெசார் சாரணி முகமட் கூறினார்.

“நான் முன்பே சொன்னது போல், விமான நிலையம் அமைக்க நிலத்தை பயன்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், விற்பனை முடிந்துள்ளதால், தற்போது எந்த திட்டமும் இல்லை. எனவே, அந்த பகுதியை  தனியார் நிறுவனத்திடம் டெவலப் செய்ய விடுங்கள்.”

இன்று ஈப்போவில் உள்ள Kompleks Sultan Nazrin Muizzuddin Shah இல் மாநில அளவிலான தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சகத்தின் ஹரி ராயா கூட்டம் மற்றும் 2022 பேராக் கெலுர்கா மலேசியா சமூக தூதர் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.

விமான நிலையத்திற்கான நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்காமல் பேராக் அரசாங்கம் இன்னும் காப்பாற்ற முடியும் என்று பார்ட்டி பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (Putra) துணைத் தலைவர் டத்தோ ஹமிதா ஒஸ்மான்(Hamidah Osman) கூறியது குறித்து சரணியிடம் கருத்து கேட்கப்பட்டது.

“விமான நிலையக் கட்டுமானத்திற்காக நிலத்தைத் தக்கவைக்க வேண்டிய அவசியம் உள்ளது, ஏனெனில் நிலத்தை வாங்கிய நிறுவனம்  பெயரில் ஒரு கேவியட்  (சொத்தின் மீது) உள்ளது, அதே நேரத்தில் சட்ட  கட்டுப்பாடுகளின் அடிப்படையில் நிலத்தை வைத்திருக்கும் அதிகாரத்தை மாநில அதிகாரிகள் வைத்திருக்கிறார்கள். ” என்று அவர் கூறியிருந்தார்.