நாட்டில் நடக்கும் பண மோசடிகளுக்கு முடிவு கட்ட மத்திய வங்கிக்கு ஆலோசனை

மத்திய வங்கியான பேங் நெகாரா மலேசியா (BNM) நாட்டில் நடக்கும்  நிதி மோசடியை நிவர்த்தி செய்ய மேலும் திரணுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது,

இது பற்றி PKR பொருளாளர் லீ சீன் சுங்(Lee Chean Chung) கூறுகையில், சமீபகாலமாக அடிக்கடி பண மோசடி சம்பவங்கள் நடந்து வருகிறது என்றார்.

லீ BNM ஆளுநரிடம் ஒரு ஆலோசனைக் கடிதத்தை சமர்ப்பித்தார், பிறகு அவர்களுடன் ஒரு சந்திப்பை நாடினார்.

இது வளர்ந்து வரும் நெருக்கடியாக இருப்பதால் எங்கள் ஆலோசனைகளை நேரடியாக தெரிவிக்க ஆளுநருடன் ஒரு சந்திப்பை நடத்துவோம் , “என்று அவர் கூறினார்.

லீயுடன் பத்து அராங் (Bakar Arang) சட்டமன்ற உறுப்பினர் சைமன் ஊய், தேஜா (Teja ) சட்டமன்ற உறுப்பினர் சான்ட்ரியா என்ஜி, சிம்பாங் புலாய் (Simpang Pulai) சட்டமன்ற உறுப்பினர் டான் கர் ஹிங், நெகிரி செம்பிலான் மந்திரி புசாரின் (Negeri Sembilan MB) சிறப்பு அதிகாரி ரோம்லி இஷாக் மற்றும் (Putrajaya) PKR தலைவர் ஒன் அபு பக்கர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

மத்திய வங்கியின் வணிகக் குற்றங்கள் விசாரணைத் துறை மற்றும் BNMTelelink ஆகியவற்றுக்கான போலிஸ் ஹாட்லைனில் நிதி மோசடிகளை வெளியிடுவது போன்ற  நிவர்த்தி செய்வதற்கான BNM இன் முன்முயற்சிகளை லீ வரவேற்றார், ஆனால் இந்த  நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றார்.

மோசடிக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற BNM இன் அழைப்புக்கு வங்கிகள் மற்றும் இ-வாலட் ஆபரேட்டர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

“எங்கள் அழைப்பு போதாது,  வங்கி அமைப்பு மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், இந்த ஊழல் சிண்டிகேட்களை நீதியின் முன் கொண்டுவரவும் நாம் விரைவாகவும் திறமையாகவும் செயல்பட வேண்டும்,” என்று லீ கூறினார்.

மலேசியாகினி பார்வையிட்ட BNM ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் , நான்கு பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன, அவை:

  1. வணிக வங்கிகள் நிதி மோசடி உதவிப் பிரிவை அமைப்பதை உறுதி செய்தல்
  2. வங்கிகள் பொறுப்பு என்று கண்டறியப்பட்டால் இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறையை எளிதாக்குதல்
  3. காவல்துறை, மலேசிய தொடர்பாடல் மற்றும் பல்லூடக ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சு போன்ற சட்ட அமுலாக்க முகவர் நிலையங்களுடன் BNM தலைமையிலான பணிக்குழுவொன்றை அமைப்பதன் மூலம் ஒத்துழைப்பை அதிகரித்தல்
  4. டிஜிட்டல் நிதி மோசடிக்கு சிறந்த முறையில் பதிலளிப்பதற்கு காலாவதியான சட்டங்களை மீளாய்வு செய்வதற்காக சட்ட அதிபருடன் கலந்துரையாடுதல் அடங்கும்.

இதேபோல், டிஜிட்டல் நிதி மோசடியைக் கையாளும் சட்டங்களை கடுமையாக்குமாறு ரோம்லி அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“நாட்டின் நிதி அமைப்பைபில், ​​டிஜிட்டல் நிதி மோசடி மிகவும் கவலைக்குரிய பகுதி, வங்கி நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைந்தால், மக்கள் வங்கி அமைப்பில் நம்பிக்கை இழந்து, வங்கிகளில் உள்ள டெபாசிட்களை திரும்பப் எடுடித்து விடுவார்கள் எனபதை  கற்பனை செய்து பாருங்கள், இது நாட்டின் நிதி அமைப்பை முடக்கும்”.

நாடு தற்போது குறைந்த நாணய மாற்று விகிதத்தை எதிர்கொள்கிறது, நாட்டின் நிதி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை இழப்பது நிச்சயமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்னும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் சட்டத்தைத் திருத்த வேண்டும், தேவைப்பட்டால் கடுமையான உட்பிரிவுகளைச் சேர்க்க வேண்டும், இல்லையெனில் நாடு மற்றொரு கடுமையான விளைவை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.