உணவு நெருக்கடியின் மத்தியில் விவசாயிகளை ஏன் வெளியேற்ற வேண்டும் – பிஎஸ்ம் தலைவர்

நாடு உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டது துரதிர்ஷ்டவசமானது, அதேநேரத்தில் மாநிலத்திலும், நாட்டிலும் அதிக காய்கறிகளை உற்பத்தி செய்யும் பேராக்கின் பள்ளத்தாக்குகளிலிருந்து விவசாயிகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை கண்டிக்கத்தது என்கிறார் ஜெயக்குமார்,

பேராக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மெர்டேகாவுக்கு முன்பே பல தசாப்தங்களாக மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு பங்களித்து வருகின்றனர், என்று பார்ட்டி சோசியலிஸ் மலேசியா தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ் கூறியுள்ளார்.

பேராக் அரசு, தங்களுக்குச் சொந்தமில்லாத நிலத்தை ஆக்கிரமித்துள்ள விவசாயிகளை வெளியேற்றி, அவர்களுக்கு மாற்றாக மலை நிலத்தை வழங்கியது, அனால் அது விவசாயத்திற்கு பொருத்தமானதல்ல என்று அவர்கள் அந்த நிலத்தை ஏற்க மறுத்துள்ளனர்.

இந்த விவசாயிகள் காலனித்துவ காலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினர், அதன்பின்னர் ஒருபோதும் வெளியேற்றத்தை எதிர்கொண்டதில்லை, மேலும் அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில் அவர்கள் தொடர்ந்தனர்.

1970 களில் ரசாக் ஹுசைன் அரசாங்கம் தேசத்தில் உணவு விநியோகத்தை அதிகரிக்க பசுமை புத்தக திட்டத்தின் ஒரு பகுதியாக எந்தவொரு காலி நிலத்திலும் விவசாயம் செய்ய மக்களை ஊக்குவித்ததாக அவர் கூறினார்.

“விவசாயிகள் காலி நிலத்தில் விவசாயம் செய்ய உதவுவதற்காக நில அலுவலகம் இயக்கப்பட்டது. இந்த விவசாயிகள் நில உரிமையாளர்கள் அல்ல, அத்துமீறி நுழைபவர்கள் என்று இப்போது குற்றச்சாட்டுகள் உள்ளன, இது முட்டாள்தனம் என நாங்கள் நினைக்கிறோம், ”என்று அவர் செய்தியார்களிடம் கூறினார்.

எட்டு மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலத்தில் காய்கறி விவசாயம் 5  சதவீதம் மட்டுமே ஆக்கிரமித்துள்ளது என்றார் ஜெயக்குமார்.

700,000 ஹெக்டேர் மட்டுமே நெல்லுக்கு பயன்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் 800,000 ஹெக்டேர் மிளகு, கொக்கோ, தென்னை மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு உள்ளிட்ட பிற காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. விவசாய நிலத்தின் பெரும்பகுதி – 80 சதவீதம் அல்லது 5.5 மில்லியன் ஹெக்டேர் – எண்ணெய் பனைக்காக பயன்படுத்தப்படுகிறது.

“ஆனால் இன்னும், இந்த 5 சதவீதம் விலைமதிப்பற்ற நிலத்தில் உருவாக்குபவர்கள் மற்றும் மாநில அரசு உரிமைப்படுத்திக்கொள்கிறது. இங்குள்ள பிரச்சினை விவசாயிகளைப் பற்றியது அல்ல, இது நம் நாட்டின் உணவுப் பாதுகாப்பின் நிலை. நில அபகரிப்புகள் தொடர்ந்து நடந்தால், நமக்கான காய்கறிகளை உற்பத்தி செய்யும் திறனை எவ்வாறு அடைவோம்? என்று அவர் கேல் எழுப்பியுள்ளார்.

சிறு விவசாயிகளுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் குத்தகை வழங்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு நிலத்தில் விவசாயம் செய்யவில்லை என்றால் அதை ரத்து செய்து நிபந்தனையுடன்  மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.

“ஏழை விவசாயிகள் அநியாயமாக வெளியேற்றப்படுவதை தடுக்க  ஒரு சரிபார்ப்பு மற்றும் சமநிலை வழிமுறை இருக்க வேண்டும்,”.

2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் காய்கறிகளுக்கான தேவை 20சதவீதம் அதிகரித்துள்ளது,அரசாங்க புள்ளிவிவரங்களின்படி 2010 ஆம் ஆண்டில் 54.7 கிலோவாக இருந்த காய்கறிகளின் தேவை 2020 இல் தனிநபர் தேவைக்கு 65.1 கிலோவாக இருந்தது.

இருப்பினும், அரிசி தேவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர்க்கு  76.5 கிலோவாக இருந்தது  4சதவீதம் குறைந்தது, பழங்களின் தேவை 17சதவீதம் குறைந்து 78 கிலோவாக இருந்தது.

பேராக்கில் உள்ள செமோர் மட்டும் 2019 இல் கிட்டத்தட்ட 95,000 மெட்ரிக் டன்கள் காய்கறிகளை உற்பத்தி செய்தது. இதன் மதிப்புடைய ரிங்கிட் 200 மில்லியன் ஆகும்.

மலேசியா புத்ரா பல்கலைக்கழக விரிவுரையாளர் எம் நசீர் ஷம்சுதின் கூறுகையில், மாநிலத்தின் காய்கறிகள் அல்லது உணவு உற்பத்தியின் மதிப்பில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து கணக்கிட்டு, காய்கறி அல்லது உணவு உற்பத்திக்காக மாநிலங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்கிறார்.

FMT