நபிகள் நாயகத்திற்கு எதிரான அவமதிப்பு தொடர்பாக மலேசியா சிறப்பு பிரதிநிதியை இந்தியாவுக்கு அனுப்பியது

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தனது சிறப்புப் பிரதிநிதியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க அனுப்பி, முகமது நபிக்கு எதிரான அவமதிப்புகள் குறித்து மலேசியாவின் கருத்துக்களை அரசுக்குத் தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்தியுள்ளார்.

கூடுதலாக, வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா (மேலே) (Saifuddin Abdullah) கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக மலேசியாவின் எதிர்ப்பை தெரிவிக்க ஜூன் 7 ஆம் தேதி கோலாலம்பூருக்கு இந்திய உயர் ஆணையரை  அமைச்சகம் அழைத்தது.

“இதுவரை, சிறப்புத் தூதுவரால் இந்தியப் பிரதமருடன் உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்த முடியவில்லை என்பது புரிகிறது. எங்கள் கருத்துக்கள் இந்தியாவில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Indera Mahkota MP யான சைஃபுதீன், நபியை அவமதித்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு அரசியல்வாதிகள் தங்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து நீக்க இந்திய அரசு விரைவான நடவடிக்கை எடுத்தது என்று கூறினார்.

அவரின் (சுப்பிரமணியம்) தரக்குறைவான கருத்துக்கள் இந்தியாவின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்றும், எதிர்காலத்தில் இந்த விவகாரம் மீண்டும் நடந்தால், அதை ஒரு சிறந்த வழியில் தீர்க்க இரு தரப்பினரும் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம், “என்று அவர் கூறினார்.

சமீபத்தில் இந்தியாவின் ஆளும் கட்சியான பிஜேபியின் இரு உறுப்பினர்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டனர்.

இந்த விஷயம் முஸ்லீம் உம்மா மத்தியில் சீற்றத்தைத் தூண்டியது , குறிப்பாக மேற்கு ஆசியா, இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது, பல வணிக வளாகங்கள் இந்திய தயாரிப்புகளை புறக்கணித்ந்தன.