தூருன் போராட்டம் – அமானா இளைஞர் தலைவர் உட்பட 3 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்

ஜூலை 23 அன்றுஅதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிரான  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று தனிநபர்கள்  குற்றம் சாட்டப்பட்டனர்.

அமானா இளைஞர் தலைவர் Hasbie Muda, பத்து பி.கே.ஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் Muhammad Sabda Suluh Lestari மற்றும் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக மலேசியா ( International Islamic University Malaysia) மாணவர் சங்கத் தலைவர் Aliff Naif ஆகியோர் மீது அமைதி பேரணி சட்டம் (Peaceful Assembly Act) 2012 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

ஹாஸ்பி மீது PAA வின் பிரிவு 9 (5) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, அதாவது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ரிம10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ஜூலை 1 ஆம் தேதி கம்போங் பாருவில் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக அமானாவின் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு மதியம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.

அந்த நேரத்தில், சமையல் எண்ணெய்க்கான மானியங்களை நிறுத்துவதாக அரசாங்கம் அப்போதுதான் அறிவித்திருந்தது.

மாஜிஸ்திரேட் வோங் சாய் சியா, ஹாஸ்பிக்கு ரிம3,000 என ஜாமீனை நிர்ணயித்தார், அடுத்த வழக்கு செப்டம்பர் 22க்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஜூலை 9 அன்று கோலாலம்பூரில் உள்ள சோகோ வணிக வளாகத்தில் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக மற்றொரு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சப்தா(Sabda) தனியாக  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் சார்பில் வழக்கறிஞர் பிரையன் என்ஜி(Bryan Ng) ஆஜரானார், அதே சமயம் இந்த வழக்கின் துணை அரசு வழக்கறிஞர் முகமது ரட்ஸி ஷா(Mohd Radzi Shah) இருந்தார்.

சப்தாவின் ஜாமீன் ரிம. 7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

தூருன் ஆர்ப்பாட்டம் தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்ட நபர்கள் போலிசாரால் விசாரிக்கப்பட்டுள்ளனர்.