போஸ்-கு இத்துடன் முடிவடையவில்லை – நஜிப்பின் மகள்

நஜிப் அப்துல் ரசாக்கின் மகள் நூரியானா நஜ்வா, “நீதி கிடைக்கும் வரை” தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியளித்துள்ளார்.

ஒருவேளை நாங்கள் போதுமான அளவு போராடவில்லை. ஒருவேளை நாங்கள் எங்கள் நீதிமன்ற  அமைப்பு மீது எங்கள் முழு நம்பிக்கையை வைத்திருக்கலாம்.

“ஒருவேளை நாங்கள் எங்கள்  நோக்கத்தையும் முழு மனதுடன் நம்பியிருக்கலாம், எனவே கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் எதிர்த்து நின்றோம்”.

இருப்பினும் இன்று  நீதி கிடைக்க வில்லை, நாங்கள் போராடும் வாய்ப்பையும் பெறவில்லை.

“ஆனால்’ போஸ்-கு (Bossku’) (நஜிப்பை விவரிக்கப் பயன்படுத்தப்படும் பெயர்) இத்துடன் முடிவடையவில்லை,” என்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.

நஜிப் பாதுகாப்பாகத் தங்களிடம் திரும்பும் வரை தனது தாயும் உடன்பிறப்புகளும் ஓய்வெடுக்க மாட்டார்கள் என்று நூரியானா கூறினார்.

“உங்கள் வலிமையை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்”

“அவர்களால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும், ஆனால் அவர்களால் உங்கள் உணர்ச்சிகளையும் மன வலிமையையும் கட்டுப்படுத்த முடியாது,  உங்கள் ஞான வார்த்தைகளை நான் ஒவ்வொரு நாளும் என்னுடன் வைத்திருப்பேன்.” என்றார்.

ரோஸ்மாவின் தீர்ப்பு செப்டம்பர் 1ஆம் தேதி

ரிம 1.25 பில்லியன் சரவாக் கிராமப்புற பள்ளிகளின் சூரிய சக்தி திட்டத்துடன் தொடர்புடைய அவரது ஊழல் விசாரணையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும்போது நூரியானாவின் தாயார் ரோஸ்மா மன்சோர் செப்டம்பர் 1 ஆம் தேதி தனது நிலையை அறிவார்.