குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரோஸ்மா கண்ணீர் மல்க அழுதார்

அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிறகு ரோஸ்மா கண்ணீர் மல்க அழுதார்

RM1.25 பில்லியன் சோலார் ஹைப்ரிட் எரிசக்தி திட்டத்துடன் தொடர்புடைய அவரது ஊழல் வழக்கு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ரோஸ்மா மன்சோர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விசாரணை நீதிபதி முகமது ஜைனி மஸ்லான், அரசுத் தரப்பு வழக்கில் நியாயமான சந்தேகத்தை எழுப்பத் தவறிவிட்டது என்று தீர்ப்பளித்தார்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

ரோஸ்மாவுக்கு உயர் நீதிமன்றம் ரோஸ்மாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது, மேலும் RM970 மில்லியன் அபராதம் விதித்தது, கட்டத்தவறினால் மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

ரோஸ்மா, தான் ஒரு பாதிக்கப்பட்டவர், குற்றவாளிகள் இன்னும் வெளியேதான்  இருக்கிறார்கள் என்றார்

ரோஸ்மா நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்

பிற்பகல் 4.16: ரோஸ்மா மன்சோர் இன்று பிற்பகல் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

எவ்வாறாயினும், விசாரணை நீதிபதி மொஹமட் ஜைனி மஸ்லான், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்யும் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க அனுமதித்தார்.

தற்போதுள்ள RM2 மில்லியன் ஜாமீனில் அவர் தொடர்ந்து இருக்கவும் நீதிபதி அனுமதித்தார்.