போர்க்கப்பல் ஊழல் விசாரணை குறித்து – ஊழல் தடுப்பு ஆணையத்தை விசாரிக்க கோரிக்கை

ஊழல் தடுப்பு அமைப்பான MACCயை விசாரிக்குமாறு பிரதமர் துறையின் நாடாளுமன்ற  சிறப்புத் தேர்வுக் குழுகீழ் இயங்கும் முகமைகள்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

லிட்டோரல் போர் கப்பல் (LCS) கொள்முதல் குறித்து MACCயின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் இது அவசியம் என்று மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறினார்.

“இது மிகவும் திருப்தியற்றது. RM9 பில்லியன் LCS ஊழலுக்காக MACC ஏன் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியது என்பதை விளக்க PSSC(Parliament’s Special Select Committee) அவசரமாகக் கூடி (MACC தலைவர்) அசாம் பாக்கியை அழைக்கும் என்று நான் நம்புகிறேன்”.

“(MACC) LCS ஊழல்குறித்த இரண்டு அறிக்கைகளின் தகவலைக் கொண்டிருந்தது – அப்போதைய ஆடிட்டர் ஜெனரல் அம்ப்ரின் புவாங்(Ambrin Buang) தலைமையிலான LCS மீதான பொது ஆளுமை, கொள்முதல் மற்றும் நிதிமீதான சிறப்பு புலனாய்வுக் குழு (JKUSTUPKK) மற்றும் Alliance IFA (M) Sdn Bhd நடத்திய  LCS கொள்முதல் (2011-2014) தடயவியல் தணிக்கை அறிக்கையால் மேற்கொள்ளப்பட்டது”.

“இந்த அறிக்கைகளில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மீறல், முறைகேடுகள் மற்றும் ஏமாற்றுதல் போன்ற எண்ணற்ற சாத்தியமான குற்றச்சாட்டுகள் உள்ளன,” என்று லிம் (மேலே) கூறினார்.

பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee) ஊழல் தொடர்பான விசாரணைக்கு இரண்டு அறிக்கைகளை நம்பியுள்ளது.

ஊழலில் ஈடுபட்டவர்கள்மீது எம்ஏசிசி வழக்குத் தொடர வேண்டும் என்று PAC முன்பு பரிந்துரைத்தது.

எவ்வாறிருப்பினும், PAC அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டபின்னர், MACC முன்னாள் Boustead Navy Shipyard Sdn Bhd நிர்வாக இயக்குனர் அஹ்மத் மொஹமட் நோர்(Ahmad Mohd Nor) மீது LCS திட்டத்துடன் தொடர்பில்லாத குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டியதன் மூலம் எதிர்வினையாற்றியது.

LCS திட்டத்தின் பாரிய செலவு மற்றும் நஜிப் அப்துல் ரசாக் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்திற்கு முந்தையது என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, LCS திட்டம்குறித்து ஏன் முன்னதாகச் செயல்படவில்லை என்பது குறித்தும் PSSC, MACCயிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று லிம் கூறினார்.

RM9 பில்லியன் LCS ஊழல்குறித்து MACC நஜிப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளதா என்று PSSC, குறிப்பாக அசாம்பாக்கியிடம் கேட்க வேண்டும்.

“அல்லது பிரதமர் துறையின் கீழ் உள்ள ஏஜென்சிகளில் உள்ள PSSC நாட்டின் நிர்வாகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தத் தவறிய முதல் PSSC தானா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

PSSCக்கு கோலா கெராய் எம்.பி அப்துல் லத்தீஃப் அப்துல் ரஹ்மான்(Kuala Kerai MP Abdul Latiff Abdul Rahman) தலைமை வகிக்கிறார்.