ஜாஹிட் விடுதலை செய்யப்பட்டதற்கு அரசு தரப்பு பதில் அளிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை

அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டில் தங்கள் வழக்கை நிரூபிக்க அரசுத் தவறியதற்கு பதில் அளிக்குமாறு இரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு அட்டர்னி ஜெனரலை மற்றொரு எம்பி வலியுறுத்தினார்.

69 வயதான ஜாஹிட், தனது வெளிநாட்டு விசா முறை ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒரு நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சாட்டப்பட்ட 40 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். உயர் நீதிமன்ற நீதிபதி யாசித் முஸ்தபா, அப்போது துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த ஜாஹிட் மீது முதன்மையான வழக்கை நிறுவ அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று தீர்ப்பளித்தார்.

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் மற்றும் அட்டர்னி ஜெனரல் குழு  ஆகியவை ஜாஹிட் மீதான முதன்மையான வழக்கை நிரூபிக்கத் தவறியதை விளக்க வேண்டும் என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.

” நீதிபதியின் தீர்ப்பின் அடிப்படையில், வழக்குத் தரப்பு ஜாஹிட் மீதான முதன்மையான வழக்கை நிரூபிக்கத் தவறிவிட்டனர், மேலும் அட்டர்னி ஜெனரல் குழுமற்றும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் இதற்கு பதிலளிக்க வேண்டும்” என்று பாகன் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கூறியுள்ளார்.

வழக்குரைஞர் ஏஜிக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று பிகேஆர் தகவல் தலைவர் ஃபஹ்மி ஃபசில் கூறினார்.

லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதை எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பது பற்றி, ஜாஹிட் வழக்குக்கும் ரோஸ்மா மன்சோரின் வழக்கிற்கும் இடையே நீதிபதி ஒப்பிட்டுப் பார்த்தார்,

“இரண்டு வெவ்வேறு வழக்குரைஞர் குழுக்கள் அந்தந்த வழக்குகளுடன் வழங்கிய விவரங்களுக்கு இடையில் நீதிபதி ஒப்பிட்டுப் பார்க்க வைத்தது என்ன என்று ஒருவர் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

“இதற்கிடையில், இந்த முடிவை முழுமையாகப் புரிந்துகொள்ளும் போது நாம் அனைவரும் முழு தீர்ப்பையும் படிக்க வேண்டும்,” என்று லெம்பஹ  பாண்டாயின்  நாடாளுமன்ற உறுப்பினரான ஃபஹ்மி தெரிவித்தார்.

பிகேஆரின் பாசிர் குடாங் எம்பி ஹசன் கரீம் இந்த முடிவுக்கு எதிராக ஏஜி மேல்முறையீடு செய்வார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

“ஷா ஆலமில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஜாஹிட் வழக்கின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதற்கு முன் ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஏஜியின் விளக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்”.

ஜாஹித்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டாம் என அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் நஜிப் ரசாக் மேல்முறையீட்டில் பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் போலவே தீர்ப்பின் அடிப்படையும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

 

-FMT