MRT பாதையின் இரண்டாம் கட்டம் 95% நிறைவடைந்தது

புத்ராஜெயா வெகுஜன விரைவு போக்குவரத்து (MRT) பாதையின் இரண்டாம் கட்ட பணிகள் 95% அதிகமாக நிறைவடைந்துள்ளதாகவும், இந்த மாத இறுதியில் இறுதி சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் Prasarana Malaysia Bhd (Prasarana) தெரிவித்துள்ளது.

MRT Corporation Sdn Bhd (MRT Corp) அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் நில பொது போக்குவரத்து நிறுவனம் (Land Public Transport Agency) ஆகியவற்றின் சோதனைகள்மூலம் இதை முடிப்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தலைவரும் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான முகமட் அசாருதீன் மாட் சா(Mohd Azharuddin Mat Sah) கூறினார்.

“மேற்கொள்ளப்படும் சோதனைகள் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அவர்கள் கண்காணித்து வருகின்றனர், இது மார்ச் மாதத்திற்குள் செயல்பட முடியும், இருப்பினும் தேதி அரசாங்கத்தால் (Transport Ministry) அறிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

மலேசிய தேசிய செய்தி முகமையின் (Bernama) தலைமை நிர்வாக அதிகாரி ரோஸ்லான் அரிஃபின்(Roslan Ariffin) தலைமையிலான தூதுக்குழு இன்று கோலாலம்பூரில் உள்ள Menara UOA Bangsar வருகை தந்தபின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த விஜயம் குறித்து கருத்து தெரிவித்த முகமட் அசாருதீன், பொது போக்குவரத்து அமைப்பு தொடர்பான சமீபத்திய பிரச்சினைகளை விளம்பரப்படுத்துவதற்கும் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கும் பெர்னாமாவிற்கும் பிரசாராவுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

“இது ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் செய்தியாளர்கள், டிஜிட்டல் வானொலி மற்றும் தொலைக்காட்சிக்குத் தகவல்களை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு விரிவான ஒத்துழைப்பு ஆகும். ஊடகங்களுடன் ஒரு விரிவான ஒத்துழைப்பை நாங்கள் உருவாக்குவது இதுவே முதல் முறையாகும், “என்று அவர் கூறினார்.

இந்த வருகையின்போது, தலைநகரில் நில பொது போக்குவரத்து முறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த பல்வேறு முன்மொழிவுகள் தனக்கு கிடைத்ததாகவும், இரு நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு ஒத்துழைப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் விளக்கினார்.