எம்ஏசிசி விசாரணையில் உள்துறை அமைச்சகம் தலையிட முடியாது

596 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் மீதான மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் விசாரணையில் உள்துறை அமைச்சகம் தலையிடாது.

எம்ஏசிசி -க்கு சுதந்திரம் உள்ளது, அது அவர்களின் பொறுப்பு என்று அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.

இன்று காவல்துறை பயிற்சி மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஏசிசி தனது பொறுப்புகளை சட்டப்படி நிறைவேற்ற இடம் அளிக்க வேண்டும்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பதிவு, ஆட்சேர்ப்பு மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைப் பதிவு செய்தல் தொடர்பான திட்டத்துடன் தொடர்புடைய சுக்குக் ஒப்பந்தத்தின் மீதான விசாரணையை எளிதாக்குவதற்கு, எம்ஏசிசியால் அமைச்சக அதிகாரிகள் ப்யன்படுத்தப்படுவர்  என்ற அறிக்கை குறித்து சைஃபுதீனிடம் கருத்து கேட்கப்பட்டது.

விசாரணையில் உதவுவதற்காக கடந்த செவ்வாய்கிழமை எம்ஏசிசியால்  கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒரு நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் ஒரு தலைமை நிதி அதிகாரி ஆகியோர் அடங்குவர்.

அவர்களில் மூன்று பேர் மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர், மற்றவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

-fmt