முட்டை இறக்குமதி விவகாரம்: தனக்கு வந்த 2 அழைப்புகளை விசாரிக்குமாறு லீ போலீசாரை வலியுறுத்துகிறார்

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் தீபக் ஜெய்கிஷன்(Deepak Jaikishan) மற்றும் முட்டை இறக்குமதியாளர் J&E Advance Tech Sdn Bhd சம்பந்தப்பட்ட “முட்டை பிரச்சினை” தொடர்பாகத் தனக்கு வந்த இரண்டு தொலைபேசி அழைப்புகள்குறித்து விசாரிக்குமாறு MCA தலைவர் வீ கா சியோங் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

நேற்று அதிகாலை 1 மணிக்குச் சேரஸ் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக வீ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இதற்கு முன்பு, மார்ச் 13 ஆம் தேதி காலை 9.51 மற்றும் 9.52 மணிக்கு முறையே இரண்டு முறை என்னை அழைத்ததை மறுத்த தீபக் ஜெய்கிஷனுக்கு மார்ச் 17 அன்று போலீசில் புகார் அளிக்குமாறு சவால் விடுத்தேன்”.

“போலீசாரிடம் புகார் அளிக்க அவருக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுத்தேன். அவர் அவ்வாறு செய்யத் தவறியதால், நான் முன்பு உறுதியளித்தபடி காவல்துறையில் புகார் அளித்தேன், “என்று வீ (மேலே) இன்று கூறினார்.

கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வின்போது, ​​அயர் ஹிதம் நாடாளுமன்ற உறுப்பினரான வீ, இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி விவகாரம் தொடர்பான தனது அறிக்கையைச் சரிசெய்வதற்காகப் பிரதமர் அலுவலகத்தின் (PMO) பெயரைத் தீபக் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.

கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 63 இன் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, நாடாளுமன்றத்தில் பேச விலக்கு அளிக்கப்பட்ட ஒரு எம்.பி.க்கு எதிராக எந்தவொரு விரும்பத் தகாத நடத்தை அல்லது அச்சுறுத்தல் செயல்களுக்குப் பிரதமர் அலுவலகத்தின் பெயரை யாரும் பயன்படுத்தமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

“பிரதமர் அலுவலகத்தின் பெயரை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது. இந்த விவகாரத்தைப் போலீசார் விசாரிக்க அனுமதிப்பேன்,” என்று வீக்கூறினார்.

தீபக் அழைப்புகளைச் செய்யவில்லை என்று மறுத்தார், ஆனால் வீ பின்னர் ட்ரூகாலர் தொலைபேசி பயன்பாட்டில் சோதனைகளிலிருந்து அழைப்பாளர் ID இன் ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டார்.

அப்போது, தொழிலதிபரை யாராவது ஆள்மாறாட்டம் செய்தால் போலீசில் புகார் அளிக்குமாறு தீபக்குக்கு வீ சவால் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, முட்டை இறக்குமதியாளர் J&E Advanced Tech Sdn Bhd வீயை அழைத்ததை ஒப்புக்கொண்டு, இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வது குறித்த தனது அறிக்கையைத் திரும்பப் பெறுமாறு ஐயர் ஹிதம் எம்.பி.யிடம் கேட்டுக் கொண்டார்.

பிப்ரவரி 22 அன்று, வீ நாடாளுமன்றத்தில் உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்றும், இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யக் கூடாது என்றும் கூறினார்.

உள்ளூர் விநியோக பற்றாக்குறையின்போது இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரே நிறுவனம் J&Eஆகும்.