தற்போது நடைபெறும் விசாரணைகள் அரசியல் உள்நோக்கமா? ஆதாரம் காட்டுங்கள் – பிரதமர்

எதிர்க்கட்சியில் உள்ள அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்ற கூற்றை பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் நிராகரித்துள்ளார்.

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் அல்லது பிற அமலாக்க அமைப்புகளின் விசாரணைகள் “அரசியல் அறிவுறுத்தல்களை” அடிப்படையாகக் கொண்டவை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை வழங்குமாறு அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீனின் வீட்டில்  வருவாய் வாரியம் (LHDN) நடத்திய சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின் சனிக்கிழமை கூறியிருந்தார். ஹம்சா பெர்சத்து மற்றும் PN இன் பொதுச் செயலாளர் ஆவார்.

பெர்சத்து சுப்ரீம் கவுன்சில் உறுப்பினர் சைபுதீன் அப்துல்லாவும் இந்த சோதனை PN-ன் புகழை கெடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு “மலிவான அரசியல் நாடகம்” என்று கூறினார்.

டாமான்சாராவில் உள்ள தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதை தொடர்ந்து, வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக இத்தகைய குற்றச்சாட்டுகள் தன்னை இழிவுபடுத்துவதற்காக செய்யப்பட்டதாகக் கூறினார்.

ஹம்சா மற்றும் பிற பிஎன் தலைவர்களும் சமீப மாதங்களில் முஹைதின் மற்றும் பிற பெர்சத்து தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பிறகு, அரசாங்கம் எம்ஏசிசியை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார்கள்.

மார்ச் மாதம், முஹைதின் 32.7 மில்லியன் ரிங்கிட்டை உள்ளடக்கிய நான்கு அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையை எதிர்கொண்டார். அவர் மீது 200 மில்லியன் ரிங்கிட் பணமோசடி செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஒரு மாதத்திற்கு முன்பு, தசெக் கெலுகோர் எம்பி வான் சைபுல் வான் ஜான், ஜன விபாவா முன்முயற்சி தொடர்பாக லஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

-fmt