கிள்ளான் பள்ளத்தாக்கிற்கான தண்ணீர் கட்டணத்தை உயர்த்த Air Selangor கோரிக்கை

கிள்ளான் பள்ளத்தாக்கு நீர் சேவை ஆபரேட்டர் Air Selangor அரசாங்கம் விரைவில் நீர் கட்டணங்களை மறுஆய்வு செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதன் செயல் தலைமை நிர்வாக அதிகாரி அபாஸ் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், அதன் வருடாந்திர வருவாய் மற்றும் செலவுகளுக்கு இடையில் ஒரு சமநிலை இருப்பதை உறுதி செய்வதற்காக நீர் கட்டணங்களைப் படிப்படியாக உயர்த்துவது அவசியம்.

Air Selangor கடந்த ஆண்டு மொத்த வருவாயில் ரிம2.45 பில்லியனைப் பதிவு செய்துள்ளதாகவும், அதன் செயல்பாட்டு மற்றும் மூலதன செலவினங்களில் ரிம5.14 பில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

2021 ஆம் ஆண்டுடன் (ரிம2.18 பில்லியன்) ஒப்பிடும்போது கடந்த ஆண்டின் வருவாய் 12.38% அதிகரித்திருந்தாலும், நிறுவனத்தின் மொத்த செலவு வருவாயின் அளவைவிட அதிகமாக இருந்தது.

“வருவாயில் அதிகரிப்பு இருந்தபோதிலும், மொத்த செலவினம் (செயல்பாட்டு மற்றும் மூலதனச் செலவுகள்) மொத்த வருவாயைவிட அதிகமாக உள்ளது, இது நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மையை அடைய மேலும் தண்ணீர் கட்டண மதிப்பாய்வுகள் அவசியம் என்பதைக் குறிக்கிறது,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோருக்கு Air Selangor சேவை செய்கிறது.