தேர்தலில் ஒதுக்கப்பட்ட இராமசாமி கட்சியில் இருந்து விலகினார்

இன்று காலை டிஏபி-யில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த பி ராமசாமி, கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்-கை கடுமையாம விமர்சித்தார். அரசியல்வாதியாக மாறிய இந்த முன்னாள் கல்விமான்.

அதிகாரம் மற்றும் பதவிக்காக டிஏபி-யில் இராமசாமி சவாரி செய்ததாகவும், ராமசாமியை மாநிலத் தேர்தலில் வேட்பாளராக முன்பு  நிறுத்தியதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் லோக் கூறியெந்தார்.

இருப்பினும், நிலைமையை துல்லியமாக சித்தரிக்கவோ அல்லது “சக்கரவர்த்தி” என்று சித்த்தரிக்கப்படும் லிம் குவான் எங்-க்கு  எதிராக செல்லவோ லோக்-வுக்கு தைரியம் இல்லை என்று இராமசாமி கூறினார்.

“ஆறு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டது ஒரு அரசியல் சுத்திகரிப்பு மற்றும் அவர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட தேசியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளும் அளவுக்கு லோக் நேர்மையானவர் அல்ல,” என்று அவர் ஒரு அறிக்கையில் மேலும் கூறினார்.

இராமசாமி டிஏபி-யில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம் அவர் கூறிய “சக்கரவர்த்தி” தான் என்கிறார்.

அடிப்படை தைரியம்

மூன்று முறை பேராய் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இராமசாமி  மலாய்க்காரர்கள் அல்லாதவர்களைப் பற்றிய பிரச்சினைகளை எழுப்புவதற்கு லோக்- க்கு தைரியம் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

“மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் உரிமைகளை எடுத்துரைப்பதில் அடிப்படை கண்ணியமும் தைரியமும் இல்லாத ஒருவருக்கு நேர்மை மற்றும் கட்சி விசுவாசம் பற்றி பேசும் தைரியம் உள்ளது.”

“சுருக்கமாக, அவருக்கு நேர்மையின் அர்த்தம் தெரியாது. ஒருவேளை அவர் போதுமான அளவு கல்வி கற்கவில்லை.”

“டிஏபியில் குவான் எங்-கின் விருப்பங்களை எதிர்க்கும் அடிப்படைத் துணிவு அவருக்கு இல்லை. அவர் என்றென்றும் அவருக்குக் கட்டுப்பட்டவர்” என்று இராமசாமி மேலும் கூறினார்.