டாக்டர் மகாதீர், ஹாடி மீதான விசாரணை ஆவணங்கள் அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸில் சமர்ப்பிக்கப்பட்டன

முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மீதான விசாரணை ஆவணங்களை (IPs) போலீசார் மேல் நடவடிக்கைக்காக அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸில் சமர்ப்பித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஆஃப் போலீஸ் ரஸாருதீன் ஹுசைன், செப்டம்பர் 5 அன்று மகாதீர் மீதான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், ஹாதி மீதான விசாரணை ஆவணங்களை இன்று காலைச் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

பெரிக்கத்தான் நேசனல் தலைவர் முகிடின் யாசின் சமீபத்திய உரையில் அவர் கூறிய கருத்துகள்குறித்து செப்டம்பர் 12 ஆம் தேதி அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் ரஸாருதீன் கூறினார்.

முதலில் செப்டம்பர் 11 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த அமர்வை ஒத்திவைக்குமாறு முன்னாள் பிரதமர் கோரியதாகவும் அவர் கூறினார்.

விசாரணைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதை மறுத்த ரஸாருதீன் (மேலே) இனம், மதம் மற்றும் ராயல்டி அல்லது “3R” வழக்குகள் என்று அழைக்கப்படும் விஷயங்களில் காவல்துறை சமரசம் செய்யாது என்றார்.

“அரசியல்வாதிகளின் அறிவுரைகளைக் காவல்துறை பின்பற்றுகிறது என்ற கருத்து உண்மையல்ல”.

“3R விஷயங்களில் தொடுத்தவர்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது (இடது) மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்

“முந்தைய அரசாங்க நிர்வாகம் கூட 3R சிக்கல்களைத் தொடக் கூடாது என்று அழைப்பு விடுத்தது, ஏனெனில் இது பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும்,” என்று அவர் கூறினார்.

முகிடினும் முன்னாள் நடைமுறைச் சட்ட அமைச்சர் தகியுதீன் ஹசனும் இது போன்ற பிரச்சினைகளை விளையாடுவதை எச்சரித்ததை அவர் குறிப்பிட்டார்.

“ஆட்சியில் இருக்கும் எந்தவொரு அரசாங்கமும், நாட்டிற்கு குழப்பத்தை ஏற்படுத்தும் 3R சிக்கல்களை விளையாடுவதை நாங்கள் விரும்பவில்லை”.

“இது எங்கள் அணுகுமுறை, நாங்கள் அறிவுறுத்தப்படுகிறோம் அல்லது கட்டாயப்படுத்தப்படுகிறோம் (3R சிக்கல்களை விளையாடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்)” என்று காவல்துறைத் தலைவர் கூறினார்.

3ஆர் சிறப்பு பணிக்குழு

ஒரு கேள்விக்குப் பதிலளித்த ரஸாருதீன், 3R சிறப்புப் பணிக்குழுவை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

“தற்போதைக்கு அது தேவையில்லை. 32 அதிகாரிகளைக் கொண்ட அதிரடிப் படை, இப்போது நம்மிடம் உள்ளதே போதும்… ஏழு நாட்களுக்குள் விசாரணையை முடிப்பது”.

“நாங்கள் விசாரணை ஆவணங்களை AGCயிடம் சமர்ப்பித்திருந்தாலும், அது AGCயின் பரிந்துரைகளுடன் மீண்டும் எங்களிடம் வரும்”.

“தடயவியல் தரவு போன்ற மேலும் விரிவான தகவல்கள் தேவைப்படலாம், மற்றவற்றுடன்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, தேசத்துரோகச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் ஹாடி விசாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், அரச நிறுவனத்தை அவமதித்ததாக மகாதீரிடம் விசாரணை நடத்தப்பட்டது.