வாகன கண்ணாடிகளை சாயலாக (tinting) மாற்றினால் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்பது உண்மையல்ல – லோக்

விதிகளை மீறி சாயலான கண்ணாடியைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற தகவலைப் போக்குவரத்து அமைச்சகம் மறுத்துள்ளது

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் (ஹரப்பான்- சிரம்பான்) கூறுகையில், விதிமீறலில் ஈடுபட்ட எந்த வாகன உரிமையாளரும், சிறைவாசம் அனுபவித்தது ஒருபுறம் இருக்கட்டும், நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக எந்தப் பதிவும் இல்லை,

இவ்விவகாரம் தொடர்பாக மக்களுக்கு “தவறான செய்தி” தெரிவிக்கப்பட்டது என்றார்.

“கண்ணாடியைப் பயன்படுத்தியதற்காகச் சிறையில் அடைக்கப்படுவது சரியல்ல. நீங்கள் தவறு செய்தால் (கண்ணாடியைப் பயன்படுத்தி) அபராதம் விதிக்கப்படும் (மற்றும்) அபராதம் அதிகமாக இல்லை,” என்று அவர் கூறினார்.

லோகே நாடாளுமன்றத்தில் வழங்கல் மசோதா 2024 மீதான விவாதத்தின் நிறைவு அமர்வின்போது பேசினார்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோகே

கடந்த மாதம், எந்த வாகன உரிமையாளரும் ஜன்னல் டின்டிங் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால், ரிம 2,000 அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று ஊடகங்கள் தெரிவித்தன; இரண்டாவது அல்லது அதற்குப் பிறகு தண்டனை விதிக்கப்பட்டால், அவர்களுக்கு ரிம 4,000க்கு மேல் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 12 மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இத்தகைய தண்டனை மிகையானது என்பது பொதுமக்களின் எதிர்வினை.

Yayasan Keprihatinan Komuniti Malaysia தலைவர் ஹலீம் இஷாக், இந்தப் பிரச்சினை தொடர்பாகப் பல புகார்கள் மற்றும் ஆட்சேபனைகளை அவரது குழு பெற்றதாகக் கூறினார்.

சாயல் ஜன்னல்களை நிறுவுவதற்கான அபராதங்களை அமல்படுத்துவதை மறுபரிசீலனை செய்யப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அவர் அறிவுறுத்தினார்.

வாகன உரிமையாளர்கள் வண்ணக் கண்ணாடியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையை வழங்கியுள்ளது என்று லோக் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக வண்ணமயமான கண்ணாடியைப் பயன்படுத்த முடியும் என்று லோக் கூறினார், ஆனால் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஒப்புதல் வழங்கப்படுவதற்கு முன்பு முதலில் சோதனைகள் செய்யப்படும் என்றும் நினைவூட்டினார்.

“அமைச்சர்கள் போன்ற VIP கள் முற்றிலும் இருண்ட ஜன்னல்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அல்லது பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக நினைக்கும் எந்தவொரு தரப்பினரும் விண்ணப்பிக்கலாம்”.

“கடத்தப்படுவார்கள் என்ற பயம் போன்ற பாதுகாப்பு பிரச்சினைகளுள்ள பணக்காரர்கள் விண்ணப்பிக்கலாம்,” என்று அவர் கூறினார்.

அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பு விண்ணப்பத்தைச் சாலைப் போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் முதலில் பரிசோதிக்கும் என்று அவர் கூறினார்.