தேசிய முன்னணி எம்பிக்கள் கட்சி தாவினால் ரிம 10 கோடி அபராதம்

கட்சி தாவினால் அல்லது கட்சியை விட்டு விலகினால் அம்னோ எம்.பி.க்கள் தங்கள் ‘எம் பி’ இருக்கையை இழக்க நேரிடும் அதோடு  ரிம100 மில்லியன் (10 கோடி) அபராதம் கட்ட வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறினார்.

நேற்றிரவு திரெங்கானுவில் உள்ள கெமாமானில் ஒரு செராமாவில் அ அசிரஃப், அம்னோ எம்.பி.க்கள் பெரிக்காத்தான் நேஷனலுக்கு மாற வாய்ப்பில்லை என்று வாக்காளர்களுக்கு உறுதியளிக்கும் போது இவ்வாறு கூறினார்.

ஒவ்வொரு அம்னோ எம்.பி.யும் கட்சியின் முடிவுக்கு எதிராகச் சென்றால் கட்சி உறுப்பினர் பதவியை துறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கட்சியுடன் ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இது, கூட்டரசு அரசியலமைப்பின் 49A பிரிவைத் தூண்டும், இது டேவான் ராக்யாட்டில் பதவி விலகுபவர்கள் தங்கள் இடங்களை இழக்கச் செய்யும் என்று அவர் கூறினார்.

இரண்டாவதாக, அம்னோ எம்.பி.க்கள் கட்சிக்கு ரிம100 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அசிரஃப் (மேலே) கூறினார்.

“இந்த சரத்து சரியானதா?

முன்னாள் எம்.பி. சுரைடா கமருதின் பிகேஆருக்கு RM10 மில்லியன் வழங்க உத்தரவிட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.

“எனவே இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்று நீதிமன்றங்கள் தெரிவித்தன, எனவே இது பிஎன் எம்பிகளுக்கும் பொருந்தும். இந்த இரண்டு (ஒப்பந்த நிபந்தனைகள்) மூலம், எந்த பிஎன் எம்பியும் விலக மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.