மாற்றுத்திறனாளி மாணவரை கிண்டல் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை

சபா கல்வி இயக்குனர் ரைசின் சைடின், மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவரை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படும் ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அறிவித்தார்.

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் அறிக்கையின்படி, ஆசிரியர் தவறுதலாக ஒரு பெற்றோர்-ஆசிரியர் வாட்ஸ்அப் குழுவில் கூன் விழுந்த மாணவர் என்ற கருத்துடன் அந்த மாணவனின் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தி சமூக ஊடக தளமான TikTok இல் பதிவேற்றப்பட்டது.

இதனையடுத்து குழந்தையின் தந்தை கல்வி அமைச்சிடம் புகார் அளித்தார்.

“அனைத்து மாணவர்களும், குறிப்பாக மாற்று திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவையுடையவர்கள், மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும்.”