தனிப்பட்ட இலட்சியங்களை விட நாட்டின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – சபா முதல்வர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் “துபாய் நகர்வு” போன்ற திட்டங்களுக்குப் பதிலாக நாட்டின் நலன்களைப் பற்றி சிந்திக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் வலியுறுத்தியுள்ளார் சபா முதல்வர் ஹாஜிஜி நூர்.

“மலேசியாவில் குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏன் உருவாக்க வேண்டும்? முரண்பாடுகளை ஏன் விதைக்க வேண்டும்?” என ஹாஜிஜி ஒரு செய்தியாளர் பேட்டியில் கேள்வி எழுப்பினார். “அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம். நாட்டிற்கு முதலிடம் கொடுப்போம்,”என்று கபுங்கன் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) தலைவர் கூறினார்.

நவம்பரில் தனது முதல் பதவிக் காலத்தைக் குறிக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஐக்கிய அரசாங்கத்திற்கு தனது அசைக்க முடியாத ஆதரவை அளிப்பதாக ஹாஜி மீண்டும் வலியுறுத்தினார்.

“நாங்கள் அரசியல் ஸ்திரத்தன்மையை விரும்புவதால் அன்வாரை ஆதரிக்கிறோம். மலேசியாவின் எதிர்காலத்திற்கான நல்ல கொள்கைகளையும், வரும் ஆண்டுகளில் மலேசியாவை வளர்ந்த நாடாக மாற்றும் கொள்கைகளையும் அவர் அறிமுகப்படுத்தியிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது”.

அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து “துபாய் நகர்வு” பற்றிய ஊகங்கள் எழுந்தன.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிக்கு ஆதரவை மாற்றக்கூடிய எம்.பி.க்களை அடையாளம் காண “நிறுவனகளுக்கு” இடையே பணிகளைப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான வதந்தியான முயற்சிகளை அன்வார் நிராகரித்தார், அது தனது நிர்வாகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் நாட்டை முனேற்றப் பாதையில் கொண்டு செல்வதிலும் மக்களைக் கவனிப்பதிலும் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறினார்.

புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் போதுமான சட்டப்பூர்வ அறிவிப்புகளைக் கொண்டிருப்பதாக சனுசி மற்றும் பெரிக்காத்தான் நேசனலின் கூற்று இருந்தபோதிலும், சபா சம்பந்தப்பட்ட இடத்தில், அன்வாருக்கு அதன் ஆதரவைப் பற்றி கேள்வியே இல்லை என்று ஹாஜிஜி கூறினார்.

“சனுசியின் கூற்று உண்மையாகிவிடாது, ஏனெனில் ஐக்கிய அரசாங்கம் பெரிக்காத்தானின் எம்.பி.க்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.”

கடந்த ஆண்டு, ஐந்து பெர்சத்து எம்.பி.க்கள் அன்வார் மற்றும் அவரது நிர்வாகத்திற்கு தங்கள் ஆதரவை உறுதியளித்தனர்.

முன்னதாக, சபா அரசாங்கம் புத்ராஜெயாவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது என்றும், பிரதமராக விரும்புவோர், மக்கள் தங்களை ஆதரித்தார்களா என்பதைப் பார்க்க தேர்தலுக்கு காத்திருக்க வேண்டும் என்றும் ஹாஜி கூறினார்.

 

 

-fmt