அப்படியென்றால், சாமிவேலு விசுவாசமற்றவரா? மகாதீரை சடினார் கிட் சியாங்

சீன மற்றும் இந்திய மலேசியர்களின் விசுவாசத்தின் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காக டாக்டர் மகாதீர் முகமதுவை லிம் கிட் சியாங் கண்டித்தார்.

முன்னாள் பிரதமர் மகாதீர் தொலைநோக்கு திட்டம் (விசன்) 2020 மற்றும் பங்சா மலேசியா ஆகிய இரண்டையும் நிறுவியவர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், 98 வயதான  மகாதீர் இந்த இரண்டு கருத்துக்களுக்கும் “மிகப்பெரிய அவதூறு” செய்ததாக குற்றம் சாட்டினார்.

மகாதீரின் அமைச்சரவையில் பணியாற்றிய மலாய்க்காரர் அல்லாத அமைச்சர்களான முன்னாள் மஇகா தலைவர் மறைந்த எஸ்.சாமிவேலுவை அவர் நினைவூட்டினார்.

“பிரதமராக மகாதீர் இருந்தபோது 22 ஆண்டுகள் அவரது அமைச்சரவையில் இருந்த சாமிவேலு, மலேசியாவுக்கு விசுவாசமாக இல்லை என்று அவர் கூறுகிறாரா?” டிஏபி தலைவர் ஒரு அறிக்கையில் கேட்டார்.

“அவரது அமைச்சரவையில் பணியாற்றிய லீ சான் சூன், டாக்டர் லிங் லியோங் சிக், லீ கிம் சாய், டிங் செவ் பே, லிம் ஆ லெக், நியோ யீ பான், சோங் ஹான் நியான், சோங் சியாங் சன், இங் செங் கியாட், ரிச்சர்ட் ஹோ, டாக்டர் லிம் கெங் யாய்க், பால் லியோங், ஓங் கீ ஹுய், ஸ்டீபன் யோங், லா ஹியெங் டிங் போன்றவர்கள்  மலேசியாவுக்கு விசுவாசமாக இருக்கவில்லையா? “ என்று சாடினார் கிட் சியாங்.

அப்படியென்றால், விஷன் 2020 மற்றும் பாங்சா மலேசியா ஆகியவை ஒரு தேசிய மோசடியைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மற்றொரு அடிப்படைக் கேள்வி என்று லிம் கூறினார்.

மறைந்த எஸ் சாமிவேலு

மகாதீரின் 22 ஆண்டுகள் மற்றும் 22 மாதங்கள் பிரதமராக இருந்தபோது, அவர் ஒருபோதும் விசுவாசம் குறித்த கேள்வியை எழுப்பவில்லை என்றும் அவர் கூறினார்.

1985 இல் மகாதீரின் உரையை லிம் மேற்கோள் காட்டினார்: “மக்கள் தங்கள் சொந்த கலாச்சாரங்கள், மதிப்புகள் மற்றும் மதங்களை விட்டுவிட வேண்டும் என்ற அச்சம் மக்களிடையே இருந்தது. இது வேலை செய்யவில்லை, பங்சா மலேசியா தான் பதில் என்று நாங்கள் நம்புகிறோம்.”

பாங்சா மலேசியாவின் கட்டுமானத்தின் அடிப்படையாக மலாய் தேசியத்தையும் பன்முக கலாச்சாரத்தையும் மகாதீர் முன்வைத்தார் என்பது தெளிவாகிறது என்றார் லிம்.

1996 ஆம் ஆண்டில்,  டைம் (TIME) இதழ் மகாதீரின் ஒருங்கிணைப்பு கொள்கையை மேற்கோள் காட்டியது: “மக்கள் மலேசியர்களாக இருக்க 100 சதவீதம் மலாய்க்காரர்களாக மாற வேண்டும் என்பது முன்பு இருந்த யோசனை.”

“இது பல இனங்களைக் கொண்ட நாடு என்பதை நாங்கள் இப்போது ஏற்றுக்கொள்கிறோம். நம்மைப் பிரிக்கும் தடைகளை முற்றிலுமாக அகற்றுவதற்குப் பதிலாக பாலங்களைக் கட்ட வேண்டும்.”

“அனைத்து சீனர்களையும் இஸ்லாத்திற்கு மாற்ற நாங்கள் விரும்பவில்லை, மேலும் எங்கள் மக்களாகிய முஸ்லிம்களிடம், ‘நீங்கள் மக்களை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிக்க மாட்டீர்கள்’ என்று கூறுகிறோம்.”

‘கிளாசிக் தோல்விகள்’

விஷன் 2020 மற்றும் பங்சா மலேசியா ஆகிய இரண்டும் “கிளாசிக் தோல்விகள், ஒரு ஐக்கிய மலேசிய தேசத்தை உருவாக்குவதற்கு பட்டியலிடப்பட்ட அனைத்து ஒன்பது சவால்களும் செயல்படத் தவறிவிட்டன ” என்று லிம் கூறினார்.

“சமீப காலமாக மலேசியா மோசமாக பிளவுபட்டது, ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் மற்றும் 3R சிக்கல்கள் சமூக ஊடகங்களில் பொய்கள்,  போலி செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளின் உதவியுடன் சுரண்டப்பட்டு ஒன்றுபடுவதற்குப் பதிலாக மலேசியர்கள் பிரிக்கப்பட்டனர்.

“இருப்பினும், மகாதீர் பிரதமராக இருந்த 22 ஆண்டு காலத்தின் போது மற்றொரு அமைச்சரான ரபிடா அஜீஸ், விஷன் 2020 மற்றும் பாங்சா மலேசியா என்பது அனைத்து மலேசியர்களின் பல்வேறு இன மற்றும் பரம்பரைத் தோற்றங்களை உள்ளடக்கியதாகும் என்ற பரப்புரையின் வழி, நிலைமையை மீட்டெடுத்தார்.

மலேசியாவிற்கு இப்போது அதன் மக்களை ஒன்றிணைக்க ஒரு புதிய பார்வை தேவைப்படுவதாகவும், கடந்த காலத்துடன் மூழ்கியிருக்கும் மகாதீரின் கருத்து விரையமானது என்றும் லிம் கூறினார்.

“மலேசியன் எதிர்காலத்திற்கான ஒரு புதிய பொதுவான பார்வையில் அதன் விதியைக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.