வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக்  நஸ்மி நிக் அஹ்மத், அண்மைக்காலமாக நிலவும் வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கிளந்தானில் உள்ள நான்கு பகுதிகளில் 2-ம் நிலை வெப்ப அலை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37°C முதல் 40°C வரை இருக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிக வெப்பத்தால் இரண்டு இறப்புகள் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார், பிப்ரவரியில் பஹாங்கில் 22 வயது இளைஞரும், கடந்த மாதம் கிளந்தானில் மூன்று வயது குழந்தையும் உயிரிழந்தனர்.

“அரசாங்கத்தின் தேசிய மூடுபனி மற்றும் வறண்ட வானிலை குழுவின் இரண்டாவது கூட்டத்தை வெப்பமான காலநிலை குறித்து விவாதிக்க விரைவுபடுத்துமாறு நான் அழைப்பு விடுத்துள்ளேன்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

myCuaca மற்றும் MyIPU ஆப்ஸ், அதிகாரப்பூர்வ மேடமலேசியா இணையதளம் மற்றும் காற்று மாசுபடுத்தும் குறியீட்டு மேலாண்மை அமைப்பு போர்டல் மூலம் வானிலை மற்றும் காற்றின் தரம் குறித்து பொதுமக்களை தொடர்ந்து தெரிந்துகொள்ளுமாறு நிக் நஸ்மி  அறிவுறுத்தியுள்ளார்.

எந்தவொரு திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளுக்கும்மேற்கொள்ள வேண்டாம் என அவர் அறிவுறுத்தினார், இது காற்றின் தரத்தை மோசமாக்கும். மேலும், திறந்தவெளியில் ஏதேனும் தீ அல்லது தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அல்லது சுற்றுச்சூழல் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

பசிபிக் பெருங்கடல் நீர் வெப்பமயமாதலால் ஆசியாவில் பொதுவாக மழைப்பொழிவைக் குறைக்கும். எல் நினோ பாதிப்பு, ஜூலை வரை தொடரலாம்.

1998 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மலேசியாவின் வெப்பமான ஆண்டாக உள்ளது என்றும், கிளந்தாந்தான், பெர்லிஸ் மற்றும் கெடா போன்ற மாநிலங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிக வெப்பத்தை அனுபவிப்பதாகவும் நிக் நஸ்மி கூறினார்.

 

 

-fmt