அனைத்து இன மக்களின் உரிமைகளுக்காக போரடுவோம் – அன்வார்

மலேசியாவில் அனைத்து இனங்களின் “நியாயமான பிரதிநிதித்துவத்திற்காகவும் அதோடு கூட்டாட்சி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைப் பாதுகாப்பதற்கும்” பிகேஆர் தொடர்ந்து போராடும்  என்று அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

அக்கட்சியின் 25வது ஆண்டு விழாவில் நேற்று பேசிய அன்வார், மலேசியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாக இருந்தாலும், மற்ற சமூகத்தினரின் உரிமைகளை மறுக்க முடியாது.

“பிகேஆர் அரசியலமைப்பின் கொள்கைகளை தொடர்ந்து நிலைநிறுத்தும், தேசம் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் இருக்க, ஒவ்வொரு இனத்திற்கும் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். நாம் நியாயமாக இருந்தால், மலாய்க்காரர்களும் பூமிபுத்திரர்களும் ஏழைகளாக மாட்டார்கள்.

“பூமிபுத்திரர் அல்லாதவர்களுக்கு அவர்களின் உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் வழங்கினால் அவர்கள் பின்தங்கியிருக்க மாட்டார்கள். நெருங்கிய இன உணர்வின் காரணமாக மற்ற கட்சிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டாலும் நாங்கள் அசைய மாட்டோம். இந்த கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம், ”என்று அவர் ஒரு சிறப்பு உரையில் கூறினார்.

கோலா குபு பாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் இனம் மற்றும் மத பிரச்சனைகளை தொடர்ந்து விளையாடி வருவதாக குற்றம் சாட்டிய அவர், பிகேஆர் ஒவ்வொரு மலேசியரின் உரிமைகளையும் பாதுகாக்கும் என்றார்.

பிகேஆர் இப்போது ஆட்சியில் இருந்தாலும், கட்சியின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் போராட்டங்களை ஒருபோதும் மறக்கக் கூடாது என்று அன்வார் கூறினார்.

“அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திச் செல்வத்தைக் குவிக்காதீர்கள். மலேசியாவில் மாற்றத்தைத் தொடங்க நாம் கையளிக்கப்பட்டதைப் பயன்படுத்த வேண்டும். பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகள் தங்களை ஒரு ஜனநாயக தேசம் என்று பெருமிதம் கொள்ளாததால், நாம் ஒரு சாத்தியமான ஜனநாயகமாக முதிர்ச்சியடைய வேண்டும்.

“நாம் நமது  மதிப்புகளை நிலைநிறுத்த வேண்டும். இஸ்லாம் கூட்டரசின்  மதம், ஆனால் மலேசியா வெற்றிபெற, ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் நாம் மதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை நாங்கள் பராமரிக்கிறோம்.

வெளியுறவு விவகாரங்கள் குறித்து, பிரதமர் அன்வார், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான மலேசியாவின் உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும், அதே போல் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனான உறவுகளையும் பலப்படுத்த வேண்டும் என்றார். ஆசியானில் சுற்றியுள்ள நாடுகளுக்கு அப்பால் இந்த நாடுகள் முக்கியமான அண்டை நாடுகள் என்று அவர் கூறினார்.

-fmt