ஜூன் 5 ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் நீர் இடையூறு – Air Selangor

சுங்கை சிலாங்கூர் கட்டம் 1 நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திட்டமிடப்பட்ட சொத்து பராமரிப்பு மற்றும் மாற்று பணிகளைத் தொடர்ந்து ஜூன் 5 ஆம் தேதி எட்டு பகுதிகளில் சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கான நீர் வழங்கல் தற்காலிகமாகப் பாதிக்கப்படும்.

பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், ஹுலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் பகுதிகளில் ஜூன் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை பணிகள் நடைபெறும் ஏர் சிலாங்கூர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, பராமரிப்பு மற்றும் மாற்றுப் பணிகள் முடிந்து, பிரதான நீர் விநியோக முறை சீரமைக்கப்பட்ட பிறகு, ஜூன் 6-ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் நுகர்வோருக்கு நீர் விநியோகம் படிப்படியாகத் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயர் சிலாங்கூர் அறிக்கையின்படி, ஜூன் 7 ஆம் தேதி நண்பகல் நீர் விநியோகம் முழுமையாக மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆயர் சிலாங்கூர் மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளித்துப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தண்ணீர் டேங்கர்களைத் திரட்டும்”.

“எனவே, ஏர் சிலாங்கூர் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்குப் போதுமான நீர் விநியோகத்தை வைத்திருக்கவும், திட்டமிடப்பட்ட நீர் விநியோகம் தடைபடும் இந்தக் காலகட்டத்தில் தண்ணீரை கவனமாகப் பயன்படுத்தவும் அறிவுறுத்துகிறது,” என்று அது மூன்று வாரங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.

பிரீமர் எஸ்டெட் (ஹுலு லங்கட் பிராந்தியம்), தாமான் ஜெமிலாங் டெங்கில் மற்றும் பெக்கன் சலாக் (செபாங் பிராந்தியம்) மற்றும் தாமான் பான்டிங் பாரு ஆகிய இடங்களில் நான்கு நீர் நிரப்பு நிலையங்களைத் திறப்பதைத் தவிர, எந்தவொரு வாடிக்கையாளர் சேவை கவுண்டர்களிலிருந்தும் தண்ணீர் விநியோகத்தை வாங்க முடியும் என்று ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

ஆயர் சிலாங்கூர் பயன்பாடு, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற மாற்று அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சேனல்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் தகவல்களைப் பெறலாம் அல்லது ஏர் சிலாங்கூர் அழைப்பு மையத்தை 15300 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது அதன் இணையதளத்தைப் பார்வையிடலாம்.