ஊழல்  விசாரணைக்குப் பிறகுதான் நஜிப்புக்கு வீட்டு காவல் – அன்வார்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வீட்டுக் காவலில் வைக்கப்படிவது பற்றி   1எம்டிபி விசாரணை முடிவடைந்த பின்னரே யாங் டி-பெர்டுவான் அகோங் பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் பரிந்துரைத்துள்ளார்.

அன்வார், ஒரு  பிரதமராக, மன்னரின் அதிகாரத்தை மீற மாட்டார் என்றும், ஆட்சியாளர் கேட்டால் மட்டுமே அவரது பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

நேற்று காத்தார் பொருளாதார மன்றத்தில் ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியின் போது, “அகோங்  என்னிடம் ஆலோசனை கேட்டால் தான்  கூறுவேன் என்றார்.

நஜிப்பின் தண்டனையை முந்தைய மன்னர் பகுதியளவு குறைத்ததை மேற்கோள் காட்டி, உரிய நடைமுறையின் முக்கியத்துவத்தை அன்வார் எடுத்துரைத்தார். நஜிப்பின் விண்ணப்பத்தை எந்த ஒரு சாதாரண குடிமகனும் மன்னிப்பு வாரியத்தில் மேல்முறையீடு செய்வது போல் கருத வேண்டும் என்றும் அவர் மன்னருக்கு அறிவுறுத்தினார்.

நஜிப்பிற்கு சாத்தியமான அனைத்து சிறை வசதிகளையும் தாம் அளித்துள்ளதாக அன்வார் கூறினார், மேலும் அது வசதியாக இருந்தாலும், சிறை என்பது ரோஜாப் படுக்கை அல்ல என்று அன்வார் வலியுறுத்தினார்.

“நான் இந்த விஷயத்தில் ஒரு அனுபவசாலி ,” என்று அவர் தனது சொந்த சிறைவாசத்தை சுட்டிக்காட்டினார்.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்

1999 இல், அன்வார் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் பாலியல் குற்றத்திற்காக மேலும் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொண்டார். 2004 ஆம் ஆண்டில், பெடரல் நீதிமன்றம் அவரை பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது.

இருப்பினும், 2015 இல், அன்வார் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார், இருப்பினும் பின்னர் அவருக்கு முழு அரச மன்னிப்பு வழங்கப்பட்டு 2018 இல் விடுவிக்கப்பட்டார்.

நஜிப் நான்கு அதிகார துஷ்பிரயோகம் மற்றும் 21 பணமோசடிகளை எதிர்கொள்கிறார்.

முந்தைய அகோங்கின் துணை உத்தரவை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை நிர்பந்திக்க அவர் ஒரு நீதித்துறை மறுஆய்வைத் தாக்கல் செய்தார், இது பகுதி மன்னிப்புடன் தொடர்புடையது, இது அவரது சிறைத்தண்டனையை ஆறு ஆண்டுகளாக பாதியாகக் குறைத்தது மற்றும் அவரது அபராதத்தை RM210 மில்லியனில் இருந்து RM50 மில்லியனாக தள்ளுபடி செய்தது.

‘என்ன கொந்தளிப்பா?’

அன்வார் தனது நிர்வாகம் கொந்தளிப்பில் உள்ளது என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். குறிப்பாக நஜிப்பை வீட்டுக் காவலில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அழுத்தம் அல்ல என்றார்.

சமீபத்தில் நடந்த குவாலா குபு பாரு  இடைத்தேர்தலில் அரசாங்கத்தின் சீன வேட்பாளர் மலாய்க்காரர்கள் அதிகம் உள்ள தொகுதியில் எதிர்க்கட்சியான மலாய் வேட்பாளரை தோற்கடித்ததை அவர் தனது அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு சான்றாகக் குறிப்பிட்டார்.

“நாங்கள் சுமூகமாக  வெற்றி பெற்றோம். அதாவது, மீண்டும், வெகுசன மக்களின்  ஞானத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்,” என்று அவர் கூறினார்.