நாடு முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 5ஜி தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன – அமைச்சர்

ஏப்ரல் மாத நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 7,065 5G தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மிபட்சில் தெரிவித்தார்.

இது குடியிருப்புப் பகுதிகளில் 5G நெட்வொர்க் கவரேஜை 81.5% கொண்டு வருகிறது, தற்போதைய சந்தாக்கள் 11.9 மில்லியன் அல்லது 35.4% உள்ளது.

“தேசிய டிஜிட்டல் நெட்வொர்க் திட்டம் (Jendela) 2023-2025 இன் கீழ் முதலில் திட்டமிடப்பட்ட 5G செயல்படுத்தல் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முதல் கட்டமாகக் கொண்டு வரப்பட்டு, அதன் இலக்குகளை அடைவதற்கான பாதையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

சபாவின் கோத்தா கினாபாலுவில் நேற்று 2024ஆம் ஆண்டுக்கான உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தின கொண்டாட்டத்தில் பஹ்மி பேசினார்.

சபாவில் குடியிருப்புப் பகுதிகளுக்கான 5G கவரேஜ் ஆண்டின் முதல் பாதியில் 68.4% எட்டியுள்ளது, 595 5G தளங்களில் 545 நிறைவு பெற்றுள்ளது, அதே நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளில் 4G கவரேஜ் 96.9 சதவீத இலக்கைவிட 96.92 சதவீதமாக விரிவடைந்துள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 839 ஓராங் அஸ்லி சமூகங்கள் செயற்கைக்கோள் வழியாகப் பிராட்பேண்ட் வயர்லெஸ் அணுகலை (BWA) பெற்றுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

சபாவிற்கு 647 புதிய கோபுரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 398 கோபுரங்கள் ஜென்டேலா முதல் கட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் பஹ்மி செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒப்பந்ததாரர்களின் தாமதம் மற்றும் மாநில அதிகாரிகளின் அனுமதி உள்ளிட்ட பிரச்னைகளால் கோபுரங்களைக் கட்டி முடிக்கத் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜென்டேலா திட்டம் சரியாக முடிக்கப்படுவதை உறுதிசெய்ய அவரது அமைச்சகமும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் (MCMC) கண்காணிக்கும் என்றார்.

“சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நான் சந்தித்தேன், 400 கோபுரங்களில் ஏறக்குறைய அனைத்தும் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்,” என்று அவர் மேலும் கூறினார்.