மெர்சிங் நீரில் காணப்படும் ஆபத்தான கடல் நத்தைகள் மற்றும் சேறு வண்டுகள்

மெர்சிங் கடலில் பெட்ரோபோடா (Creseis Acicula) என அடையாளம் காணப்பட்ட ஆபத்தான காஸ்ட்ரோபாட்கள் இருப்பதாக ஜொகூர் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களத்தின் படி, வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நீரிலிருந்து உருவாகும் ஸ்டெரோபோடா (ஒரு சிறிய வகை கடல் நத்தை அல்லது ஸ்லக்), ஜூன் 11 அன்று பினாங்கில் உள்ள பத்து மாங் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சிக் குழுவால் கண்டறியப்பட்டது.

“பருவநிலை மாற்றம், அதிகரித்த நீர் வெப்பநிலை மற்றும் கப்பல்களிலிருந்து வரும் பாலாஸ்ட் நீர் ஆகியவை இந்த இனங்கள் நாட்டின் நீரில் பரவுவதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது”.

“இந்த மொல்லஸ்க் (எலும்புகள் இல்லாத மென்மையான உடல் விலங்கு) ஒரு குச்சியைக் கொண்டுள்ளது, இது வீக்கம், அரிப்பு, வறட்சி, உரித்தல், சிவத்தல் மற்றும் செதில் போன்றவற்றை ஏற்படுத்தும்,” என்று  அதன் முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கை கூறுகிறது.

தற்போதைக்கு அப்பகுதியில் தண்ணீர் தொடர்பான நடவடிக்கைகளிலிருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறும், விலங்குகளுடன் தொடர்புக் கொண்டவர்கள் மற்றும் அறிகுறிகளைக் கண்டவர்கல் உடனடியாகச் சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.