மலேசிய மாணவர்கள் பங்களாதேஷில் இருந்து KLIA  வந்தடைந்தனர்

பங்களாதேஷில் இருந்து புறப்பட்ட 120க்கும் மேற்பட்ட மலேசிய மாணவர்களை ஏற்றிச் சென்ற விமானம் இன்று மாலை 5 மணியளவில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய முனையம் 2 இல் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

சர்ச்சைக்குரிய சிவில் சர்வீஸ் பணியமர்த்தல் கொள்கையால் நாட்டில் ஏற்பட்ட கொடிய கலவரத்தைத் தொடர்ந்து பங்களாதேஷிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

குடும்பத்தினரும் நண்பர்களும் வருகை மண்டபத்தில் பொறுமையாகக் காத்திருந்தனர், சிலர் தங்கள் பாதுகாப்பிற்காகப் பிரார்த்தனை செய்வதைக் காண முடிந்தது.

உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் இதுகுறித்து விரைவில் செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.