மஹ்கோத்தா இடைத்தேர்தல் தேதிகுறித்து ஆகஸ்ட் 13-ம் தேதி தேர்தல் ஆணையம் கூட்டம்

மஹ்கோத்தா மாநிலத் தொகுதி இடைத்தேர்தலுக்கான சிறப்புக் கூட்டத்தைத் தேர்தல் ஆணையம் (EC) ஆகஸ்டு 13-ஆம் தேதி நடத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளது.

ஆகஸ்ட் 2 அன்று தற்போதைய மஹ்கோத்தா இருக்கையின் அசாதாரண காலியிடத்திற்கு ஜொகூர் சட்டமன்ற சபாநாயகர் முகமட் புவாட் சர்காஷியிடமிருந்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் செயலாளர் இக்மல்ருதீன் இஷாக் கூறினார்.

“ஜொகூர் மாநில அரசியலமைப்பு 1895, பகுதி இரண்டு, பிரிவு (5) பிரிவு 23 இன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் காலியிடத்தைப் பற்றிய அறிவிப்பைப் பெற்ற 60 நாட்களுக்குள் தற்செயல் காலியிடத்தை நிரப்ப வேண்டும்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

63 வயதான ஷெரீபா, சுவாசக் கோளாறுகளுக்காகப் புதன்கிழமை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெள்ளிக்கிழமை குவாங், என்சே பெசர் ஹஜ்ஜா கல்சோம்(Enche’ Besar Hajjah Khalsom Hospital) மருத்துவமனையில் சிகிச்சையின்போது இறந்தார்.