செர்டாங் மருத்துவமனை ஊழியர் போல் வேடமிட்ட சிறுவனை

செர்டாங் மருத்துவமனையில் 14 வயது சிறுவன் ஒரு வார காலம் ஊழியராகக் காட்டிக் கொண்டு “வேலை செய்தான்” என்ற குற்றச்சாட்டைப் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

காஜாங்கில் உள்ள டத்தோ அபு பக்கார் பகிண்டா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாக செபாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்போவதில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.