வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கெடா பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து அமைச்சகம் முடிவு செய்யும் – பிரதமர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அல்லது வெள்ள நிவாரண மையங்களாக (PPS) பயன்படுத்தப்படும் கெடாவில் உள்ள பள்ளிகளுக்குக் கல்வி அமைச்சகம் நெகிழ்வுத்தன்மையையும் கூடுதல் விடுமுறையையும் வழங்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

எவ்வாறாயினும், பாடங்களை இணையத்தில் நடத்த முடிந்தால், பள்ளிகள் மீண்டும் திறக்கும் வரை ஆசிரியர்களும் மாணவர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று அவர் வலியுறுத்தினார்.

“படிவம் ஐந்து பள்ளி அமர்வுக்கு, அது பராமரிக்கப்படும். ஆனால் PPS ஆகப் பயன்படுத்தப்படும் பள்ளிகளுக்கு, கல்வி அமைச்சர் நிச்சயமாக ஒரு அறிக்கையை வெளியிடுவார், மாணவர்களுக்குக் கூடுதல் விடுமுறை போன்ற சில நெகிழ்வுத்தன்மையைக் கொடுப்பார்”.

“ஆனால் இது விடுமுறை அல்ல என்பதை வலியுறுத்துகிறேன், ஆனால் வீட்டிலிருந்து வேலை செய்வது… பாடம் நடத்த சேனல் இருந்தால், அந்தப் படிப்பு நேரத்தை விடுமுறையாகப் பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை”.

“எனவே நீங்கள் பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டாலும், பள்ளி மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களை முடிக்க ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அலோர் செட்டாரில் உள்ள Sekolah Menengah Kebangsaan Agama கெடாவிற்கு இன்று வருகை செய்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார். அப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு பள்ளி ஒரு நிவாரண மையமாக மாற்றப்பட்டுள்ளது.

கெடாவில் வெள்ளம், செப்டம்பர் 2024

இன்றுடன் முடிவடையும் ஒரு வார இடைக்கால விடுமுறைக்குப் பிறகு கெடாவில் பள்ளி அமர்வு நாளைத் தொடங்க உள்ளது, ஆனால் வெள்ளம் காரணமாக, மாநிலத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் உள்ள 37 பள்ளிகள் PPS ஆக மாற்றப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநில அரசின் கீழ் உள்ள பள்ளிகள் உட்பட பள்ளிகளுக்குக் கல்வி அமைச்சகம் ஒதுக்கீடு வழங்கும் என்றார் அன்வார்.

முன்னதாக, சுல்தான் அப்துல் ஹலிம் மைதானத்தில் உள்ள  PPS ஐப் பார்வையிட்ட பிரதமர், SMKA அகமா கெடாவுக்குச் செல்வதற்கு முன், அங்குச் சுமார் அரை மணி நேரம் செலவிட்டார்.