ஹலால் சான்றிதழ் விவகாரம்:  தெரசாவிடம் அக்மால் மன்னிப்பு கேட்க வேண்டும்

ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அம்னோ இளைஞரணி தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலே, செபுத்தே எம்பி தெரசா கோக் மற்றும் அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளார்.

ஜொகூர் டிஏபி குழு உறுப்பினர் டாக்டர் பூ செங் ஹவ் கூறுகையில், பன்றி இறைச்சி மற்றும் மதுவை விற்காத உணவகங்கள் மற்றும் உணவு வணிகங்களுக்கு ஹலால் சான்றிதழை கட்டாயமாக்குவதில்லை என்ற அமைச்சரவையின் சமீபத்திய முடிவு தெரெசா கோக்-கின் கருத்தை நிரூபித்துள்ளது.

“(அரசாங்கத்தின் முடிவு) இந்த விஷயத்தில் கோக்-கின் விடயம் சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைத்து மலேசியர்களின் அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையிலானவை என்பதை நிரூபிக்கிறது.

“மலாய் மற்றும் மலாய் அல்லாத சிறு வணிக உரிமையாளர்கள் உட்பட மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால் அவரது கருத்துக்கள் அனைத்து தரப்பு மக்களின் கவலைகளையும் பிரதிபலிக்கின்றன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

செப்டம்பர் 8 அன்று அக்மல் (மேலே) டிஏபி-யின் தெரெசாவை  “நியோன்ஞா துவா” (கிழட்டு கிழவி) என்று அழைத்தபோது சர்ச்சை வெடித்தது, பன்றி இறைச்சி அல்லது மதுவை வழங்காத உணவகங்கள் மற்றும் வணிகங்கள் ஹலால் சான்றிதழைப் பெறுவதற்கான திட்டத்தைபற்றி  கோக் கேள்வி எழுப்பி இருந்தார். ).

அவரை கிண்டல் செய்யும் வகையில், கோக்கின் நெற்றியில், “ஹலால் அல்ல” என்ற சின்னத்தை கோக் வைக்க வேண்டும் என்று  அரசாங்கத்தை வலியுறுத்துவேன் என்றும் அக்மல் குறிப்பிட்டார்.

செபுதே எம்பி தெரசா கோக்

Merlimau சட்டமன்ற உறுப்பினரான அக்மால் மீது, கோக் செப்டம்பர் 11 அன்று RM25 மில்லியன் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.