சந்தேகத்திற்கிடமான வேட்டைக்காரரின் தோட்டாக்களால் ஆயுதப்படை வீரர் இறந்தார்

சரவாக், கபிட் காட்டில் இன்று அதிகாலையில் வேட்டையாடிக் கொண்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒரு நபரால் சுடப்பட்டு ராணுவப் படையினர் ஒருவர் இறந்தார்.

கபித் அருகே உள்ள ஜலான் பாலக் மல்டிபிளஸ், சாங், கி. மீ 8 வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

வனப்பகுதியில் தந்திரோபாயப் பயிற்சியின்போது, ​​பாதிக்கப்பட்ட பெட்ரஸ் லிங்கி லிமன், 29, அவரது இடது தொடை மற்றும் இடுப்பில் பலத்த காயம் அடைந்ததாகப்  மாவட்ட காவல்துறைத் தலைவர் ரவுனி மைக்கேல் ஜலக் தெரிவித்தார்.

சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ரோனி மைக்கேல் ஜலக் கூறுகையில், பாதிக்கப்பட்டவர், 29 வயதான பெட்ரஸ் லிங்கி லிமன், காட்டுப் பகுதியில் தந்திரோபாய பயிற்சியின்போது ஹேமக்கில் இருந்தபோது, ​​அவரது இடது தொடை மற்றும் இடுப்பில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர் உடனடி சிகிச்சைக்காகக் கபிட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் இரவு 7.43 மணியளவில் இறந்துவிட்டார்,” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

இந்தச் சம்பவம்குறித்து அதிகாலை 2.45 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

“சந்தேக நபரை நாங்கள் இன்னும் அடையாளம் காணவில்லை. குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு, சந்தேக நபரை நாங்கள் கண்காணித்து வருகிறோம்”.

“பாதிக்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை நாளைக் கபிட் மருத்துவமனையில் நடைபெற உள்ளது,” என்று அவர் கூறினார்.