நஜிப் அரபு நாடுகளின் நன்கொடையை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினார்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அரபு நாடுகளின் நன்கொடையைப் பணத்தை அரசியல் நோக்கங்களுக்காகச் செலவழித்துள்ளார் என்றும், அவரது தனிப்பட்ட சுகத்திற்காக அல்ல என்றும் உயர்நீதிமன்ற  இன்று விசாரணையில் கூறப்பட்டது.

ஒரு நபர் பணத்தை எடுத்து பொதுமக்களின் நலனுக்காக செலவிடுவது ஊழல் அல்ல  என்று  ஷபி அப்துல்லா வாதிட்டார்.

“95 சதவீத பணம் அவருடைய தனிப்பட்ட நலனுக்காக செலவிடப்படவில்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.

அவர் ஒரு தனியார் விமானத்தை வாங்கவில்லை அல்லது விடுதிகளில் அனைவருக்கும் மது பானம் வைத்து உபசரிக்கவில்லை, நஜிப்பின் 1எம்டிபி விசாரணையில் அரசுத் தரப்பு வழக்கின் முடிவில் சமர்ப்பிப்புகளின் போது ஷாபி கூறினார்.

நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேராவிடம், அவருடைய வாதத்தை ஆதரிக்க அவருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளதா என்று கேட்டதற்கு, நஜிப்பின் 1எம்டிபி வழக்கு முன்னுதாரணமில்லாமல் இருப்பதால், இது உண்மைகளின் அனுமானம் என்று ஷாபி கூறினார். நீதிமன்றம் உண்மையைக் கண்டறிய வேண்டிய விஷயம்.

இப்போது, ​​அரசுத் தரப்பு என்ன சொல்கிறது என்று நீதிபதி கேட்டார்.

அரசாங்கத்தின் துணை வழக்கறிஞர் (டிபிபி) கமல் பஹ்ரின் ஒமர் நீதிமன்றத்தில், நஜிப்பின் கணக்குகளில் நுழைந்ததாகக் கூறப்படும் பணம் சட்டவிரோதமான வருமானத்திலிருந்து வந்தது என்பதில் மட்டுமே அரசுத் தரப்பு அக்கறை கொண்டுள்ளது.

சக DPP அகமது அக்ரம் காரிப், நஜிப் பணத்தை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தியாரா அல்லது தனிப்பட்ட ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தியாரா என்பது பொருத்தமற்றது, அது அவருடைய நன்மைக்காகப் பயன்படுத்தப்பட்டது.

பிப்ரவரி 2011 மற்றும் டிசம்பர் 2014 க்கு இடையில் தனது AMBANK   கணக்குகளில் சேமிப்பு செய்யப்பட்ட ரிம2.28 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி நிதி தொடர்பாக நஜிப் மீது 25  பணமோசடி மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

 

-fmt