வெறுப்பை வேண்டுமென்றே பரப்பும்  பாஸ் ‘மேதைகள் -ரபிசி

டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் அல்லாதவர்களுக்கு உறவினர்கள் என்று தவறாகக் குற்றம் சாட்டிய பாஸ் தலைவர்கள், அறியாமையால் அவ்வாறு செய்யவில்லை என்று பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ராம்லி கூறியுள்ளார்.

மாறாக, வெறுப்பைப் பரப்புவதற்காக அவர்கள் இதைச் செய்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

“(டிஏபி மூத்த) லிம் கிட் சியாங் (முன்னாள் சிங்கப்பூர் பிரதமர்) லீ குவான் யூவின் உறவினர் அல்ல என்பதையும், (இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர்) ஹன்னா யோஹ் (கோடீஸ்வார்) YTL யோஹ் தியோங் லே-வின் வழித்தோன்றல் அல்ல என்பதையும் அவர்கள் அறிந்திருக்கலாம்”..

“ஆனால் இதுபோன்ற உணர்வுகள் தூண்டப்பட்டால், அது அரசியல் ஆதரவிற்காக மலாய்க்காரர்களிடம் இன வெறுப்பின் தீப்பிழம்புகளைத் தூண்டிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.ரஃபிஸி பேராக் பாஸ் தலைவர் ரஸ்மான் ஜகாரியா மற்றும் கெபாலா படாஸ் எம்பி சித்தி மஸ்துரா முகமது ஆகியோரைக் குறிப்பிட்டு பேசினார்.

“இது ஒரு சிறந்த அரசியல் உத்தி என்று அவர்கள் உணரலாம், ஆனால் நிர்வாகத் திறமைக்குப் பதிலாக அதிகாரத்தைப் பெற இன வெறுப்பைப் பிடித்துக் கொண்டால், நாடு சேதமடையப் போகிறது என்பதை இது குறிக்கிறது” என்று ரஃபிஸி (மேலே) இன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் கூறினார்.