கம்மி மிட்டாய் சாப்பிட்ட 4 ஆம் ஆண்டு மாணவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்

பள்ளிக்கு வெளியே வாங்கிய கம்மி மிட்டாயை உண்டு மூச்சுத் திணறடித்து ஆபத்தான நிலையில் இருந்த 4 ஆம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

பட்டர்வொர்த்தில் உள்ள எஸ்.கே. சுங்கை துவாவைச் சேர்ந்த 10 வயது பாமி ஹபீஸ் பக்ருதீன், பினாங்கு மருத்துவமனையில் இரவு 11 மணியளவில் காலமானார் என்று பெரிட்டா ஹரியான் தெரிவித்தார். அவரது அத்தை சித்தி பர்ஹானி பிக்ரியின் கூற்றுப்படி, நாளை காலை அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

இரண்டு உடன்பிறப்புகளில் மூத்தவரான பாமி, செவ்வாய்க்கிழமை தனது பள்ளிக்கு வெளியே மிட்டாயை வாங்கியிருந்தார். மிட்டாயை மெல்லும்போது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர் சரிந்து விழுவதற்கு முன்பு தனது ஆசிரியரை நோக்கி நடந்து சென்றார்.

சித்தி பர்ஹானியின் கூற்றுப்படி, மிட்டாய் தொண்டையில் சிக்கிய பிறகு பிராணவாயு (ஆக்ஸிஜன்) பற்றாக்குறையால் பாமியின் முகம் நீல நிறமாக மாறியது. நீண்டகால பிராணவாயு பற்றாக்குறை காரணமாக பாமியின் மூளை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அவருக்குத் தெரிவித்தனர்.

 

 

-fmt