சமீபத்திய 3 ஆர் தொடர்பான வழக்குகள் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ தாகாங்கை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன, இது போன்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ அல்லது தண்டிக்கவோ தனது அமைச்சகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த அவரைக் கட்டாயப்படுத்தியது.
இன்று காலை X தளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த சில நாட்களாகத் தனது அமைச்சகம், 3R தொடர்பான சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுப்பும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பலமுறை எழுப்பியதாக ஆரோன் தெரிவித்தார்.
எனினும், சட்ட அமலாக்க அதிகாரம் மற்றும் நடவடிக்கைகள் உள்துறை அமைச்சகம், காவல்துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், மற்றும் மலேசிய தகவல் மற்றும் தொடர்பு ஆணையம் (MCMC) ஆகியவைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – ஒற்றுமை அமைச்சகத்திடம் அல்ல என்று தெரிவுபடுதினார்.
“மேற்கண்ட அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் 3R சம்பவங்களைத் தூண்டும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பொறுப்பாக உள்ளன.”
“இந்த முகமைகளின் அமலாக்க முயற்சிகள் மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
அதன்பிறகு, 3R சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் ஒற்றுமை அமைச்சகம் மேற்கொண்டு வரும் “புனரமைப்பு மற்றும் தலையீடு” நடவடிக்கைகளை அவர் தெரிவுபடுதினார்.
இதில், eSepakat கண்காணிப்பு அமைப்பின் மூலம் இணைய உரையாடல்களைக் கண்காணித்து, தேவையான தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்குதல், அனாலிடிகல் டாஷ்போர்டு மூலம் தேவைப்படும் இடங்களில் தலையீடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை அடங்கும்.
மேலும், நீதிமன்றத்துக்குச் செல்லாமல் கருத்து முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக 571 சமூக நடுவர்கள் (community mediators) மூலம் மத்தியஸ்த சேவைகள் வழங்கும் என்று அவர் கூறினார்.
கடந்த மாதம், பொதுமக்களின் கடுமையான விமர்சனங்களுக்கு எதிராக, தனது அமைச்சகத்தின் பயன்தன்மையை ஆரோன் வலியுறுத்தினார்.
இது, தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதில் தனது செயல்திறன் குறைவாக இருப்பதாகக் கூறி, ஒற்றுமை அமைச்சகத்தை மூட வேண்டுமென்று அகாதமிகர் ஜேம்ஸ் சின் கோரியதை தொடர்ந்து நிகழ்ந்தது.
சமீபத்தில், மூன்று Era FM ஒளிபரப்பாளர்கள், தைப்பூசம் காவடி நிகழ்வை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்ட வீடியோ வெளியாகியதை தொடர்ந்து, பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்
இந்த விவகாரத்துக்குப் பிறகு, அவர்கள் மூவரும் வானொலி நிலையத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர், மேலும் MCMC மற்றும் காவல்துறை விசாரணைகளைத் தொடங்கியது.
மார்ச் 5 அன்று, Era FM சம்பவத்திற்குப் பிறகு, மதநிந்தனையான கருத்துகளை வெளியிட்ட பலரை எதிர்த்துக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆரோன் கோரிக்கை வைத்தார். இதில், சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாம்ரி வினோத் உட்பட பலர் அடங்குவர்.
MIC துணைத் தலைவர் M. சரவணன், ஜாம்ரீ மதப்பிரசங்கத்தின் பெயரில் முன்பு நிகழ்த்திய தூண்டுதலான மற்றும் சர்ச்சைக்குரிய வெளிப்பாடுகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.