எம்ஏசிசி -யின் அதிகாரங்களை அதிகரிக்கக் கூடாது என்கிறார் ஒர் அமைச்சர்

MACCஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் தங்கள்  சொத்துக்களை அறிவிப்பதைக் கட்டாயப்படுத்த கூடுதல் தனக்கு கூடுதல்  அதிகாரங்கள் தேவை என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  கூறியுள்ளது.

ஆனால் அந்தக் கோரிக்கை அதிகாரம் தவறாகப்  யன்படுத்தப்படுவதற்கு வழி  வகுத்து விடலாம் என பிரதமர் துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி கருதுகிறார்.MACC1

அதனால் எம்ஏசிசி-க்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படக் கூடாது என அவர்  சொன்னார்.

“என்றாலும் அது என்னுடைய சொந்தக் கருத்து. ஊழல் ஏதுமில்லை என்றாலும்  அது தவறாகப் பயன்படுத்தப்படக் கூடிய சாத்தியம் உள்ளது,” என்றும் நான்சி  ஷுக்ரி சொன்னார்.