மஇகா தலைவர் தேர்தல் செப்டம்பர் 22ல் நிகழும்

mic-logoபெரிதும் எதிர்பார்க்கப்படும் மஇகா தலைவர் தேர்தல் செப்டம்பர் 22ல் நிகழும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கப்பதிவதிகாரி அலுவலக நிபந்தனைகளுக்கு ஏற்ப கட்சியின் எல்லாப்  பதவிகளுக்கான தேர்தல் இவ்வாண்டுக்குள் நிகழும் என்று மஇகா தலைவர் ஜி  பழனிவேல் தெரிவித்தார்.

அவர் இன்று கோலாலம்பூரில் மஇகா மத்திய செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர்  நிருபர்களிடம் பேசினார்.

கட்சியின் துணைத் தலைவர், மூன்று உதவித் தலைவர்கள், 23 மத்திய செயற்குழு  உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் வரும் நவம்பர் அல்லது டிசம்பரில்  நிகழும் என்றும் அவர் சொன்னார்.

எல்லா 3,900 மஇகா கிளைகளும் தங்கள் ஆண்டுக் கூட்டங்களை ஆகஸ்ட் 4ம்  தேதிக்குள் நடத்த வேண்டும் என்றும் பழனிவேல் தெரிவித்தார்.

“தொகுதித் தேர்தல்கள் செப்டம்பர் இறுதியில் தொடங்கி அக்டோபர் வரை நிகழும்  ,” என்றார் அவர்.

இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்டால் தலைவர் என்ற முறையில் தமது கடைசித்  தவணையாக இருக்கும் என்றும் பழனிவேல் அறிவித்தார்.

பெர்னாமா

TAGS: