தெங்கு அட்னான்: நமக்கு அழியா மை தேவை இல்லை

inkமலேசியாவுக்கு தேர்தல் நடைமுறையின் ஒரு பகுதியாக அழியா மை இருக்க  வேண்டிய அவசியம் இல்லை என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு  அட்னான் தெங்கு மான்சோர் சொல்கிறார். காரணம் நாம் ‘மூன்றாம் உலக நாடு’  இல்லை என்றார் அவர்.

அவர் இன்று மக்களவைக்கு வெளியில் நிருபர்களிடம் பேசினார். ‘எதிர்க்கட்சிகள்  அதனை விரும்பியதால்’ தான் அழியா மைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டது என  அவர் சொன்னார்.ink1

“எதிர்க்கட்சிகள் அதனை விரும்பின. ஆகவே நாடாளுமன்றம் அதற்கு ஒப்புக்  கொண்டது. என்றாலும் அந்த மையில் அளவுக்கு அதிகமாக இரசாயனப்  பொருட்களைக் கலப்பது மக்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல,” என்றார்  தெங்கு அட்னான்.

“இந்தியாவில் அது ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரையில் இருக்கிறது.  அது ஆரோக்கியமானது அல்ல,” என்றும் அவர் குறிப்பிட்டார்.