ஜோகூர் ஆசிரியர்களின் இணையத்தள நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்

1 johorஜோகூர் கல்வித் துறை அம்மாநில ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் ஆகியோரின் சமூக ஊடக நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது.

இத்தகவலை, நேற்று கல்விக் கருத்தரங்கு ஒன்றில் வெளியிட்ட ஜோகூர் கல்வித் துறை இயக்குனர் முகம்மட் நோர் கனி    ஆசிரியர்கள் அரசு-எதிர்ப்பு கருத்துகளை டிவிட்டர், முகநூல் போன்றவற்றில் பதிவுசெய்யக் கூடாது என்றார்.

“கல்வியில் அரசியல் அல்லது இன அம்சங்கள் நுழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அது மாணவர்களைப் பாதிக்கும்”, என்றாரவர். .