முஹைடின்: இசி தலைவர் விலக வேண்டியதில்லை

inkமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அழியா மை தொடர்பில் தேர்தல்  ஆணையத்தை (இசி) விசாரிக்கப் போவதால் இசி தலைவர் அப்துல் அஜிஸ்  முகமட் யூசோப் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என துணைப் பிரதமர்  முஹைடின் யாசின் கூறுகிறார்.

தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அந்த மையின் விநியோகம் பற்றி விசாரணை  நடத்தப்படவிருப்பதால் இசி தலைவர் ராஜினாமா செய்ய வேண்டுமா என்ற  கேள்விக்கு பதில் அளித்த முஹைடின் அவ்வாறு சொன்னார்.

துணைப் பிரதமர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசினார்.