கோபிந்த்: இஓ-வுக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் சட்டத்தின் வரைவைக் காட்டுங்கள்

1 eoஅவசரகாலச் சட்டவிதி(இஓ)களுக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டத்தின் வரைவை முதலில் தங்களுக்குக் காண்பிக்க வேண்டும். அப்போதுதான் அதன் தொடர்பில் பின்னூட்டம் வழங்க முடியும் என்கிறார் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ.

அப்புதிய சட்டம் தொடர்பில் மாற்றரசுக் கட்சிகள், என்ஜிஓ-கள் முதலியோரின் கருத்துகளை வரவேற்பதாக உள்துறை அமைச்சர் கூறியிருப்பதற்கு கோபிந்த் இவ்வாறு மறுமொழி அளித்துள்ளார்.

“சீரமைப்பையும் நீதிமுறையை மேம்படுத்துவதையும் வரவேற்கிறோம். ஆனால், அது விசாரணையின்றி காவலில் வைக்க வகை செய்வதாக இருந்தால் அதை ஆதரிக்க மாட்டோம்”, என்றாரவர்.