பொறுப்பில்லை’அதனால்தான் சுவாரா கெஅடிலானுக்கு உரிமம் கொடுக்கவில்லை

1 suara‘சுவாரா கெஅடிலானிடம் “பொறுப்புணர்ச்சி இல்லை”, அதனால்தான் அச்செய்தித்தாள் அதன் பிரசுர உரிமத்தைப் புதுப்பிக்க செய்துகொண்ட விண்ணப்பத்தை உள்துறை அமைச்சு பரிசீலிக்கவில்லை என்று அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறினார்.

“பெல்டா நொடித்துப்போனது” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்திக்கு விளக்கம்கேட்டு அமைச்சு எழுதிய கடிதத்தை அது புறக்கணித்தது அச்சக, பிரசுர சட்டத்தை மீறிய செயலாகும் என்றாரவர்.

“எங்களுக்கு விளக்கமளிக்காமல் ‘இரகசியமானது’ என வகைப்படுத்தப்பட்ட அமைச்சின் கடிதத்தையும் வெளியிட்டு விட்டது”. ஜஹிட் நாடாளுமன்றத்தில் நேற்று ஒரு கேள்விக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார்.